செய்திகள்

பரமக்குடி அருகே வேன் மோதி வாலிபர் பலி: மதுரை டிரைவர் கைது

Published On 2017-11-08 09:52 GMT   |   Update On 2017-11-08 09:52 GMT
பரமக்குடி அருகே வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மதுரை டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:

திருச்சுழி அருகே உள்ள எஸ்.வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் நேற்று பரமக்குடி அருகே இலந்தைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

இலந்தைகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

விபத்துகுறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த வேன் டிரைவர் ஷேக் அப்துல்லாவை கைது செய்தார்.
Tags:    

Similar News