என் மலர்tooltip icon

    இந்தியா

    • நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    • அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதுகுறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.

    புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.

    பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.

    இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

    துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள கோட்ரி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் ஜக்தாப்(வயது36). இவர் திருமணத்துக்கு பெண் தேடிவந்தார். சமீபத்தில் திருமண தரகர் ஒருவர் நாகேஷ் ஜக்தாப்புக்கு அறிமுகம் ஆனார். அந்த தரகர் மூலம் அவருக்கு பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. பெண் தேடி கொடுத்ததற்காக திருமண தரகர் நாகேஷ் ஜக்தாப்பிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக வாங்கிக்கொண்டார். பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு காய்ஜ் தாலுகாவில் உள்ள கோவிலில் நாகேஷ் ஜக்தாப்புக்கும், பிரித்தி ராவத்துக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமண கோஷ்டியினர் கோட்ரியில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் பிரித்தி ராவத் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு நைசாக தப்பினார். திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணமகளை தேடி சென்ற மணமகன் வீட்டார் திக்கோல் அம்பா பஸ் நிறுத்தத்தில் அவரை பிடித்தனர். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பிரித்தி ராவத் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்து கழுத்தை நீட்டிய சில மணி நேரத்தில் தப்பியோட முயற்சித்தது தெரியவந்தது.

    மேலும் இந்த மோசடியில் திருமண தரகர், பெண்ணின் அத்தை உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோசடியில் தொடர்புடைய பிரித்தி ராவத்தின் அத்தை, திருமண தரகர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
    • வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன.

    வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.

    தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.

    இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.

    வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

    இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

    அதில், '9-ந்தேதி(நேற்று)வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.

    அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
    • றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

    சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.

    சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.   

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.

    சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பணிகளுக்காக நுள்ளிவிளையில் புதிய மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முன் வந்தது.
    • தற்போதைய பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நுள்ளிவிளையில் புதிதாகக் கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக தற்பொழுது உபயோகத்தில் உள்ள பாலத்திற்கு பதில் புதிய பாலம் அமைப்பதை மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாகர்கோவில்–திங்கள் நகர் ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது நுள்ளிவிளை. ரெயில்வே இரட்டிப்பு பணிகளுக்காக இங்கு ஒரு புதிய ரயில்வே மேம்பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன் வந்தது.

    அதை கட்ட தற்போது உபயோகத்தில் உள்ள மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் என பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்கள் சார்பாக இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை தொடர்பு கொண்டு இந்தப் பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.

    மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், மக்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தினை சீரமைப்பு செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னரே இந்தப் பாலத்தின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    • மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

    மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.


    மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

    அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.

    இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.

    மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது. 


    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)

    இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.

    உயிரிழப்புகளும் சேதங்களும்:

    மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)


    கலவரத்தின்போது

    • இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
    • 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
    • 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
    • 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
    • சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
    • காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    ×