search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் சோனியா, ராகுல் அஞ்சலி
    X

    தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் சோனியா, ராகுல் அஞ்சலி

    சென்னை கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அண்ணா சிலையும் திறக்கப்பட்டது.



    சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினா கடற்கரை சென்றனர். அங்குள்ள அண்ணா சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர். 

    அவர்களுடன் வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு எம்.பி, கனிமொழி எம்.பி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
    Next Story
    ×