search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த்"

    • சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
    • இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.

    நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். 

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை.
    • சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை, முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.


    அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    • தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெறும் மகளிர் மாநாடு.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பாவை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டனர்.
    • மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    • மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
    • மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் கன்னியாகுமரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஏற்பாடுகள் குறித்து மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.


    நாகர்கோவிலில் உள்ள எமது அலுவலகத்திற்கு வருகை தந்த கேரள சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களுடைய புதல்வனும் ஆன சாண்டி உம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.

    • நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    குவைத் நாட்டில் கொடுமைக்கு உள்ளாகி அங்கிருந்து கடல் வழி தப்பித்து மும்பை வந்து போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    • விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிதியுதவி அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    இதனிடையே பிள்ளைத்தோப்பு கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சஜிதாவின் பெற்றோரான முத்துக்குமார்- மீனாவை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகிறது. இதற்கிடையே புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

    அவர்களுக்கு தண்டனை வழங்குவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில் மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பாம்பன் தெற்கு வாடி துறைமுக கடற்கரையில் மீனவ காங்கிரஸ் சார்பில் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், பதவி ஆசையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

    இந்த போராட்டத்தில் மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
    • காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

    இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள்.

    "பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

    அதன் பெயரில் மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.

    காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் பாயும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
    • நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.


    கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம் தலைமையில் நடந்த இந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.


    இதனிடையே சவுதி அரேபியாவில் உடல் நல குறைவால் காலமான குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய சுபீன் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை விரைவாக கொண்டு வர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    • குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ்‌ கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.

    மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவர்களை கொலாபா போலீஸ் கைது செய்தனர்.

    இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை நியமித்து

    அவர்களது விடுதலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.

    முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விஜய் வசந்தின் நாகர்கோவில் அலுவலகத்தில் காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


    குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மத்திய பாரதிய ஜனதா அரசினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் விலைவாசி உயர்வினையும் மகளிர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் நிலைநாட்டிட பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டும்.

    மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பினுலால் சிங், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோவில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    ×