search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார்.

    அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்வது மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாளை (2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    இது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இயக்க கொடிகளுடன் சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதையும், தியாகிகளை கவுரவப்படுத்தும் புகைப்படங்களில் 2 புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்அப் நம்பரில் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகளில் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தில் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற 9-ந்தேதி பனையூரில் நடைபெற உள்ளது.

    பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.

    • தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் 1600 வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். இதை 10 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தொடர்பு கொள்ள 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுத்து கொடுக்கப்பட்டன. இயக்க தலைமை வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். தேவையற்ற, சர்ச்சைக்குரிய பதிவுகள் போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் 1600 வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். இதை 10 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தொடர்பு கொள்ள 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

    நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்குவதற்கு முன்பு ரசிகர் மன்றத்தை இப்படித்தான் கட்டமைத்ததை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடிகர் விஜய்யும் துணை அமைப்புகளை கட்டமைத்து வருவதை பார்க்கும்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி வேகமாக நகருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    தொகுதி வாரியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியது, ஏழை மாணவ, மாணவிகளுக்கு மாலைநேர இலவச டியூஷன் வகுப்புகள் அடித்தட்டு மக்களையும் கவர்ந்துள்ளது.

    விஜய்யின் வேகமான நகர்வுகள் மற்றும் செயல்பாடுகளை பார்க்கும்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாவிட்டாலும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு பலத்தை சோதித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார்.

    • முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.
    • இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூரில் நடந்தது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் குறித்து புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட வேண்டும்.

    அணியின் தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிர வேண்டும்.

    முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் மற்றும் ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.

    இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களும் அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மறுக்கட்டமைப்பு மூலம் சீரமைத்து விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூர், ஊராட்சி கிளை ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30 ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    இயக்கம் செய்து வரும் சேவைகளை தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவில் எப்போது எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை இணைக்க வேண்டும்.

    இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவும் ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.
    • மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    சென்னை:

    நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

    மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகள் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.

    கூட்டத்தில் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அடுத்ததாக வருகிற சனிக்கிழமை இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகப்படுத்தப்பட்டு அந்த அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி செய்து வருகிறோம். இதில் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக மக்கள் நல பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து இயக்கத்தின் வழக்கறிஞர் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும், இயக்கத்தினருக்கும் செயல்படுத்தும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 8.55 மணிக்கு பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுமார் 1200 பேர் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் மக்கள் இயக்க பிரமுகர் திருமணம் 21-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்‌.

    மதுரை

    மதுரையில் விஜய் மக்கள் இயக்க தெற்கு புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார்-பூமாப்பிரியா திருமணம் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப் பாளர், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்..தங்கபாண்டி தலைமையில் ஜீவா நகர் பகுதியில் உள்ள மெஜஸ்டிக் மஹாலில் நடைபெறும் திருமணத்தை மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை இணை இயக்குனர் பாஸ்கரன், வழக்கறிஞர் கோகுல் தி.மு.க. 7-வது வார்டு நகர் மன்ற தலைவர், விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர், ஆர் சீனிவாசன் உயர்நீதி மன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர், பி.என். வெங்க டேஸ்வரன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அதிமுக பகுதி துணைச் செயலாளர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள், மதுரை ஆன்லைன் விஜய் பேன்ஸ், தொகுதி ,பகுதி, நகரம், ஒன்றியம் பேரூராட்சி அளவிலான மக்கள் இயக்க நிர்வாகிகள்,நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து கிறார்கள்.

    • பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார்.
    • நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார்.

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் முதல் மதுரை மாவட்டத்தில் நடைபயணத்தை ஆரம்பித்தார்.

    செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் நெருங்கி வருபவர்களுடன் செல்பி எடுத்தும் கவர்ந்து வருகிறார். இந்த நடைபயணத்தின் போது, தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடிவரும் அண்ணாமலை அ.தி.மு.க. தலைவர்கள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.


    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பங்கேற்ற ரசிகர்கள்

    இந்தநிலையில் நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.

    அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்த போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.

    விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள இணையப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல திட்டத்தை தொடங்கி வருகிறார்.
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விரைவில் மாற்றும் நோக்கத்தில் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களையும் நடிகர் விஜய் அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என அரசியல் கட்சிகளுக்கு நிகராக மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு ஏழை மாணவ- மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தொகுதி வாரியாக தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியது. நாளை வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 350-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மக்கள் இயக்கத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யவும் விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் அந்த பட்டியலை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் இரவு பாடசாலை திட்டம் போல் ஏழைகள் வசதிக்காக இலவச சட்ட உதவி மையம் விஜய்யின் ஆலோசனைப்படி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி சிறப்பான முறையில் செய்து வருகிறோம். ஏழை மாணவ -மாணவிகள் கல்வி பயில இரவு நேர பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இலவச சட்ட உதவி மையம் மாவட்டம் தோறும் விரைவில் மக்கள் இயக்கம் மூலம் தொடங்க உள்ளோம். அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட் அருகில் இந்த மையத்தினை தொடங்குகிறோம். முதலில் மாவட்டம் வாரியாக தொடங்கி அடுத்த கட்டமாக தொகுதி வாரியாக இந்த சட்ட உதவி மையம் விரிவுபடுத்தப்படும். ஏழைகள் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த மையத்தின் மூலம் சட்ட ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் நடந்து வருகிறது.
    • விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது.

    நடிகர் விஜய் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

    அதுமட்டுமின்றி அவர்கள் மத்தியில் பேசும் போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. 6-ந்தேதி கேரள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    வருகிற சனிக்கிழமை இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார்.
    • விஜய் அரசியலுக்கு வருவதற்கு 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர்.

    அந்த வரிசையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.


    இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் 72.50 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு ஊக்க தொகை, இலவச இரவுநேர பாடசாலை போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் விஜய் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
    • விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் விஜய்.

    திரையுலகிற்கும், தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் அதற்கான காலம் கனியவில்லை என ஒதுங்கிய நிலையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.

    இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் விஜய்க்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. வார இதழ் நடத்திய சர்வேயில் விஜய் அரசியலுக்கு வரலாமா?, விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா?, விஜய் கூட்டணி வைக்கலாமா?, அவர் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு பாதிப்பு?, தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

    சென்னை, கொங்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொகுதிக்கு ஒரு ஆண்கள், பெண்கள் கல்லூரிகளில் 500 குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டார்கள். ஒரு குழுவுக்கு 10 முதல் 15 பேர் வரை என மொத்தம் 5 ஆயிரத்து 250 பேர் இதில் களம் இறங்கினர். புதுவையில் தனியே 30 பேர் கொண்ட குழு சர்வே பணியில் ஈடுபட்டது.

    மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 100 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் விஜய் அரசியலுக்கு வர 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 27.50 சதவீதம்பேர் அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

    71.56 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்றும், 28.44 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.தேர்தலில் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47.30 சதவீதம்பேர் கூட்டணி வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    அதேபோல் விஜய் அரசியலுக்கு வருவதால் தி.மு.க. வுக்கு பாதிப்பு என 40.16 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்று 22.11 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்று 20.75 சதவீதம் பேரும், பா.ஜ.கவுக்கு பாதிப்பு என்று 16.98 சதவீதம்பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று 76.53 சதவீதம் பேரும், முடியாது என்று 23.47 சதவீதம்பேரும் கருத்து கூறியுள்ளனர். சர்வேயில் பெரும்பாலானோர் கருத்து விஜய்க்கு ஆதரவாகவே உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.

    பொதுவாக விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார்? வெளிப்படையாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பாரா? பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இயக்கத்தினரை களம் இறக்குவாரா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அரசியல் களத்தில் விரைவில் விஜய்யின் அதிரடி தொடங்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

    ஆசியாவில் சமூக வலைதளங்களில் விஜய் தொடர்பான செய்தி, வீடியோக்கள் அதிகளவில் பார்க்கப்படுகின்றன. பார்வையாளர்கள் அதிகம் தேடும் நபராக நடிகர் விஜய் ஆசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 3-வது இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்தே விஜய் தனது அரசியல் நகர்வுகளை தொடங்கி இருக்கிறார்.

    • பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    • கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவி களுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.

    அரூர்,  

    கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், அரூர் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞரணி சார்பாக பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜய்நவின், பொருளாளர் சிலம்பரசன், இணைச் செயலாளர் கலையரசன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய தொண்டரணி துணை தலைவர் சிட்லிங் அசோக், இணைச்செயலாளர் மோட்டூர் சக்தி, கிளை நிர்வாகிகள் சக்திவேல், குமரேசன், கோவிந்தன், பாலாஜி, திருப்பதி, செல்வம், சத்தியராஜ், மூவேந்தன், இளங்கோ, விக்னேஷ், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் அரூர் ஒன்றிய இளைஞரணி தலைமையில் கிராமங்களில் உள்ள கிளை சார்பாக சிட்டிங், பொருசு மரத்துவளவு, ரெட்டை குட்டை, தண்டா, பறையப்பட்டிபுதூர், ஈச்சம் பாடி, கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.

    ×