search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்வாதாரம்"

    • பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணி.
    • பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.

    பேராவூரணி:

    மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்–படுவதோடு நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ' தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து கடலில் விடுதல்' என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தில் ரூ.168.948 லட்சம் மதிப்பீட்டில், 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி பாக் ஜலசந்தி கடற்பகுதியான, தஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், கடல்பகுதியில் விடப்பட்டன.

    இந்தாண்டு இதுவரை 22.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட வனஅலுவலர் அகில்தம்பி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன், ஓம்கார் பவுண்டேஷன் முனைவர் பாலாஜி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் தமிழ்மணி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் டாக்டர் ஜான்சன், டாக்டர் சக்திவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார்.
    • 2 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆசிர்வாதம், வங்கி மேலாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிபாபநாசம் இந்தியன் வங்கி கிளை சார்பில் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அனைத்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், வட்டார இயக்க மேலாளர் சரண்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கவிதா, சசிகலா, உமாராணி, கீதா, சரஸ்வதி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.
    • முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோருதல் தொடர்பாக மாரிமுத்து எம்.எல்.ஏ, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

    அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது,

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், கொருக்கை ஊராட்சி, தலைக்காடு, கண்ணன் மேடு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தக் குடும்பங்கள் குடியிருந்து வரும் நிலத்தில் ஏரி இருந்ததாகவும், மக்கள் நீர் நிலைப்பகுதிக்கான இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பதாகவும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் வழிவழியாக வாழ்ந்து வரும் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கு நீதிமன்ற உத்தரவை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

    கொருக்கை ஊராட்சியில் ஏரி இருந்ததற்கான எந்த தடயங்களும், அடையாளங்களும் இல்லாத நிலையில், அரசு ஆவணத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.

    புயல், பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலும் தலைக்காடு, கண்ணன் மேடு பகுதியில் உள்ள குடும்பங்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை.

    இயற்கை சீற்றங்களால் பதிக்கப்படாத, நீர் தேக்கம் எதுவும் இல்லாத தலைக்காடு, கண்ணன் மேடு நிலப்பகுதியை வகை மாற்றம் செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

    இதேபோல் முத்துப்பேட்டை ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி, இ சி ஆர் சாலை, மெயின்ரோடு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலப்பகுதியும் நீர்நிலைப் பகுதி என குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வருவாய்த்துறை தீவிரம் காட்டுகிறது.

    கொருக்கை மற்றும் ஆலங்காடு ஊராட்சிகளில் உள்ள நிலப்பகுதி போல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அரசின் நடவடிக்கை மாவட்டம் முழுவதும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு ஆவணங்களில் நீர்நிலைப் பகுதி அல்லது ஆட்சேபகரமான நிலப்பகுதி என வகைப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் நடப்புக்காலத் தன்மையை புலத்தணிக்கை செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவது அல்லது மாற்று இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்து. மறுவாழ்வை உறுதி செய்து வெளியேற்றுவது என்று முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் அமைக்கப்படும் உயர்மட்டக் குழுக்கள் ஆய்வு செய்யும் காலத்தை நிர்ணயித்து, இதற்கு தகுந்தபடி, அரசின் வருவாய்த்துறை உயர்நீதி மன்றத்தில் மனு செய்து, ஆக்கிரமிப்புகள் மீது சுமூகமான முறையில் தீர்வுகாண அனுமதி பெற வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான காலத்தில் தற்போது உள்ள நிலை நீடிக்க அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி 5 விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய மக்கள் கொரோனா பேரிடர் கால துயரத்தை தாங்கி வலியோடு வாழ்ந்து வரும் காலத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது.தற்போது அதற்கும்மேலாக அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது.

    ஏழை, எளிய மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து விட்டு பெரு முத லாளிகளுக்கு மானியம், வரிவிலக்கு அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோர் உலகமே பொருளாதார நெருக்கடி யில் சிக்கியபோதும் விலை வாசியை கட்டுக்குள் வைத்து பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தி மக்கள் நலனை பாதுகாத்தனர்.

    தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா, கவுன்சிலர்கள் அமுதா, ரத்தினம், அஞ்சலி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீன்வள பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை.
    • இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 முதல் மீன்வள பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு இதுவரை ஐந்து பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்துள்ளனர். இதில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவுன்சிலிங் அடிப்படையில் சேர்ந்து மிகுந்த எதிர்காலம் இருக்கும் என்று கனவோடு படித்து முடித்த உடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியேறினர். ஆனால், இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    சுமார் 150 பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மீன்வள பல்கலைக்கழகமும் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தினுடைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் மீன் வளர்ச்சி கழகத்தினுடைய தலைவர் ஆகியோர் இந்த வாழ்வாதார பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் இராமசாமி தமிழக அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து மீன்வள பொறியாளர்களை ஒன்றுதிரட்டி விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து நேரிடையாக கோரிக்கை தெரிவிப்பது எனவும் தெரிவித்தார்.

    • கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
    • விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கருங்கூழி ஊராட்சியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம் ஆகிய வட்டங்களில் வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார்அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புற பெண்களின் தொழில் முணைவோர் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது மக்கள் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்னற்ற திட்டங்களை செய்யப்படுத்தி வருகிறார்.

    வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையினையும், 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் ஆக மொத்தம் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது.

    கிராமப்புற ஏழை பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் விதவை பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1400 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 46 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டங்களை கிராமப்புற பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
    • இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், கண்காணிப்பாளர் கிளமண்ட் மற்றும் கவுன்சிலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக, மாநகராட்சியில் உள்ள மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் 7 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் மரம் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் மட்டுமே பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகள் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி ஏற்படு த்துதல், மரக்கன்றுகள் நடுதல், 50 நாளைக்கு குடிநீர் விட்டு பராமரித்தல் ஆகும்.மாநகராட்சி மூலம் 25,000 மரக்கன்றுகள் கொள்முதல் செய்தல், குடிநீர் விநியோகம் செய்தல், சுமார் 4000 எண்ணிக்கையிலான மரக் கூண்டுகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×