search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மரணம்"

    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி வக்காரி குளக்கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
    • விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை, ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (வயது 22) என்பதும், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், தொடர்ந்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார்.
    • ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சிமெண்ட் தொட்டிகள், சிலாப்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல்பகுதியில் படுத்து இருந்த இளஞ்சூரியன் தவறி நடுரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    பின்னர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் வல்லவரப்பா (வயது 52). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் கிராமம் சண்முகபுரம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கல்லாமொழியில் நடைபெற்று வரும் அனல் மின்நிலைய பணியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மாலையில் பணி முடித்து சண்முகம் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு மொட்டை மாடியில் அயர்ந்து தூங்கியுள்ளார். மறுநாள் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரை தேடி சக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வல்லவரப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர்:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.

    படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

    • மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
    • முருகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மர்ம நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் ராஜகுரு. பிராய்லர் கடை ஊழியர். இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 26). இவர் கடந்த 11-ந்தேதி மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.

    அப்போது விழித்து கொண்ட முருகேஸ்வரி சத்தம் போட்டுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்து இருந்த ஸ்குரு டிரைவரால் முருகேஸ்வரியின் கழுத்தில் குத்தி விட்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

    இதற்கிடையே முருகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மர்ம நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மர்ம நபர் மற்றும் முருகேஸ்வரி இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில் நகை பறிக்க முயன்றவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த வினோத்(34) என்பதும், அவர் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடல் உபாதை காரணமாக நேற்று இரவு வினோத் இறந்தார்.

    • தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்
    • உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுதா.

    இவர்களுக்கு ராஜா (20). சஞ்சய் (17). என்ற மகன்களும், திவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    சஞ்சய் மற்றும் திவ்யா எழுவாம்பாடியில் உள்ள பாட்டி வசந்தா வீட்டில் தங்கி இருந்தனர். சஞ்சய் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சஞ்சய் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி கிடந்த சஞ்சயை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் கடந்த 11-ந் தேதி மாலை அரசு பஸ்ஸில் சென்னைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்று தெரியாமல் இது குறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சஞ்சய் அதே ஊரைச் சேர்ந்த கவியரசு மகன் சந்தோஷ் என்பவருடன் மாம்பட்டு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார்.

    இருவரும் உயிர் நண்பர்களாக பழகி வெளியில் சுற்றியுள்ளனர். 10-ம் வகுப்பில் இருவரும் தேர்ச்சி பெறாததால் படிப்பை தொடராமல் 2 ஆண்டுகளாக கிடைத்த கூலி வேலைக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்துள்ளனர். 2 பேரில் ஒருவருக்கு வேலை கிடைக்க வில்லையென்றால் 2 பேரும் வேலைக்கு செல்ல மாட்டார்களாம்.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சந்தோசை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    இரவு நேரத்தில் தூங்காமல் எனது நண்பன் என்னை கூப்பிடுறான் அதனால் நான் அவனிடம் போகிறேன் என்றும் நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் என் நண்பன் இடத்திற்கே போகிறேன் என்று தாயாரிடம் செல்போன் மூலம் கூறினார்.

    ஆனால் பெற்றோர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏதோ விரக்தியில் பேசுகிறான் என்று நினைத்து விட்டனர். ஆனால் சஞ்சய் கூறியபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
    • பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இசை நடனம் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. இதனால் வாலிபர் முத்யம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்.

    அப்போது விருந்தினர்கள் முன்னிலையில் ஒரு பிரபலமான இசைக்கு நடனமாடினான்.

    இதனை உறவினர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். நடனமாடிக்கொண்டிருந்த போது, முத்யம் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    விருந்தினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

    4 நாட்களில் தெலுங்கானாவில் இதுபோன்ற 2-வது சம்பவம் நடந்துள்ளது.

    பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

    இந்த சம்பவங்களால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தம்பாக்கம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது24) ஆவார். இந்த வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.

    இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு வாலிபர் மகேஷ் பரிதாபமாக பலியானார்.

    இந்தச் சம்பவம் குறித்து மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
    • விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கூட்செட் உள்ளது. அதன் அருகில் உள்ள ஒரு கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    ஆனால் கிணற்றில் பிணமாக மிதந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் நேற்று மாயமான நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் அசோகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    மேலும் பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
    • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள ஆய்க்குடி சேனை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மகன் மணிச்சாமி(வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று அதிகாலை ஆய்க்குடி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டுப்பன்றி கூட்டங்கள் அவரை விரட்டி சென்று கடித்து குதறி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த மணிச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுப்பன்றி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், காட்டுப்பன்றி கடித்து வாலிபர் உயிரிழந்துள்ளார்.

    • வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
    • குடிபோதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை.

    இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்றபோது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39) என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×