search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    களியக்காவிளை அருகே காயங்களுடன் சாலையில் பிணமாக கிடந்த டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
    X

    சாலையில் பிணமாக கிடந்த டிரைவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    களியக்காவிளை அருகே காயங்களுடன் சாலையில் பிணமாக கிடந்த டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

    • வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
    • குடிபோதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை.

    இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்றபோது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39) என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×