search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் மர்ம மரணம்- கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    கிணற்றில் பிணமாக கிடந்த விக்னேஷ்

    பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் மர்ம மரணம்- கிணற்றில் பிணமாக மீட்பு

    • பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
    • விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கூட்செட் உள்ளது. அதன் அருகில் உள்ள ஒரு கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    ஆனால் கிணற்றில் பிணமாக மிதந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் நேற்று மாயமான நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் அசோகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    மேலும் பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×