search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அருகே அழுகிய நிலையில் என்ஜினீயர் உடல் மீட்பு- போலீசார் விசாரணை
    X

    திருச்செந்தூர் அருகே அழுகிய நிலையில் என்ஜினீயர் உடல் மீட்பு- போலீசார் விசாரணை

    • மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் வல்லவரப்பா (வயது 52). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் கிராமம் சண்முகபுரம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கல்லாமொழியில் நடைபெற்று வரும் அனல் மின்நிலைய பணியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மாலையில் பணி முடித்து சண்முகம் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு மொட்டை மாடியில் அயர்ந்து தூங்கியுள்ளார். மறுநாள் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரை தேடி சக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மொட்டை மாடியில் கொசு வலைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வல்லவரப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×