என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றபோது தாக்கப்பட்ட வாலிபர் மரணம்
- மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
- முருகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மர்ம நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் ராஜகுரு. பிராய்லர் கடை ஊழியர். இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 26). இவர் கடந்த 11-ந்தேதி மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது விழித்து கொண்ட முருகேஸ்வரி சத்தம் போட்டுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்து இருந்த ஸ்குரு டிரைவரால் முருகேஸ்வரியின் கழுத்தில் குத்தி விட்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதற்கிடையே முருகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மர்ம நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மர்ம நபர் மற்றும் முருகேஸ்வரி இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில் நகை பறிக்க முயன்றவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த வினோத்(34) என்பதும், அவர் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடல் உபாதை காரணமாக நேற்று இரவு வினோத் இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்