search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"

    • சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
    • சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    • ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த குடியிருப்பில் 13-வது மாடியில் மலர்விழியின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியிடம் தங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தி சில தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது என்று கூறினர்.

    இதையடுத்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி மாவட்ட கலெக்டராக மலர்விழி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பணியில் சேர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வரை பணி புரிந்துள்ளார்.

    தனது பணி காலத்தில் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் செய்வதற்கு சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண ரசீது புத்தகம், தொழில் வரி ரசீது புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களை அச்சிட்டு வாங்கி உள்ளார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மலர்விழி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    2-வது குற்றவாளியாக சென்னை சுப்பாராவ் நகரை சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளரான தாகீர் உசேன், பத்மாவதி நகரை சேர்ந்த நாகா டிரேடர்ஸ் உரிமையாளரான வீரய்யா பழனிவேலு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் இவர்கள் இருவரும் வரி வசூல் புத்தகங்களை அச்சிட்டு கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேட்டுக்கு துணை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ததில்தான் ரூ.1½ கோடி வசூலித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த ரசீது புத்தகங்களை அச்சிடுவதற்கு மலர்விழி ஐ.ஏ.எஸ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77,500 கூடுதலாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்குவதில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி அரசின் நிதியை மோசடி செய்யும் எண்ணத்துடன் குற்றவியல் சதியில் கலெக்டராக இருந்த மலர்விழி ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்த புள்ளி கோரப்படாமல் 2 தனியார் நிறுவனங்களில் இருந்தும் அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இப்படி நேர்மையற்ற முறையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 வீட்டு வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை தர்மபுரி மாவட்ட அச்சு பொறிகளின் விலையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்பட 3 பேர் மீதும் 120பி (கூட்டு சதி) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீடு உள்பட சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கிருஷ்ணன் கடந்த 2019-ம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் டெண்டர் விடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள வன ரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது.

    அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 2-வது எப்.ஐ. ஆரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன், விழுப்புரத்தை சேர்ந்த பாப்பாத்தி, சென்னையை சேர்ந்த வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வனராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது மாவட்ட கலெக்டராக இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது முறைகேடு புகார் கூறப்பட்டு இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல இடங்களில் போலீசார் வருவதை பார்த்ததும், சிலர் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணத்தை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததை பார்க்க முடிந்தது.
    • ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 200 சிக்கியது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமே அரசு அலுவலகங்களின் கடமை. ஆனால் சில ஊழியர்களின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

    தவறு செய்பவர்களை கண்டறியவும், அவர்களை கையும், களவுமாக பிடிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, லஞ்ச பேர்வழிகளை கைது செய்து வருகிறது. தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன.

    இதனால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கருதப்படும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ. அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடந்தது.

    பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் லஞ்சப்பணம் அதிகம் கைமாறுவதாக கருதப்படுகிறது. இதனால் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு துறையினர் களம் இறங்கினர்.

    பல இடங்களில் போலீசார் வருவதை பார்த்ததும், சிலர் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணத்தை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததை பார்க்க முடிந்தது.

    அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர், உடனடியாக அலுவலகங்களின் கதவுகளை பூட்டி, யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை.

    சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் வர்ணிகாஸ்ரீ தலைமையில் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த ஊழியர்கள் கணக்கில் வராத பணத்தை வெளியே தூக்கி வீசி எறிந்தனர். அங்கு பணியில் இருந்த சோதனை சாவடி இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் ஊழியர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 200 சிக்கியது. திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு கட்டும் திட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மலா்கொடி தலைமையில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல மணி நேரமாக நீடித்தது.

    திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கணக்கிட்டபோது ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 440 இருந்தது. தொடர்ந்து இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல செய்யாறு சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    ஈரோடு சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.15 ஆயிரமும், தாரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.27 ஆயிரமும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.37 ஆயிரமும் சிக்கியது. நாமக்கல் மின்வாரிய அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது.

    தூத்துக்குடி மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்திலும் நேற்று மாலை சோதனை நடந்தது. இதில் அதிகாரிகளின் கார்களில் சோதனை செய்தபோது, தியாகராஜன் என்ற அதிகாரியின் காரில் இருந்து ரூ.1 லட்சமும், அலுவலகத்தில் ரூ.42 ஆயிரமும், ஒரு தங்க நாணயமும் சிக்கியது.

    இதேபோல் நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.17 ஆயிரத்து 853 பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் நெருப்பொரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் ரூ.50 ஆயிரமும், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2 லட்சமும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    நெல்லை டவுன் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் சிக்கியது. இதேபோல் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.13,700 சிக்கியது. திருச்சி புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வேட்டை நடந்தது.

    கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோதனையில் ரூ.60 ஆயிரமும், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.13,500-ம், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500-ம் சிக்கியது.

    இதேபோல் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, கும்பகோணம் வணிக வரித்துறைக்கு சொந்தமான நடமாடும் வாகனம், நாகை தாலுகா அலுவலகம், திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கடலூரை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் 4 கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

    இதேபோல் கடலூர் மாநகராட்சியில் ரூ.5 லட்சம் சிக்கியது.

    இவ்வாறு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரங்கேற்றிய இந்த அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

    • திருவண்ணாமலையில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம், ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்கள், நாகை வட்டாச்சியர் அலுவலகம், கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம்,

    திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், தேனி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

    திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தனர். கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    • பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் பவானி மற்றும் அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாங்கும் புது வாகனம் பழைய வாகனம் எப்.சி. காண்பித்தல், எல்.எல்.ஆர். மற்றும் லைசென்ஸ் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய சுகந்தி என்பவர் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    கடந்த சில நாட்களாகவே இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவை மண்டல ஆய்வு குழு ஆலோசகர் சாந்தாமணி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்த 2 பெண் அலுவலர்கள் உட்பட 5 பேர் மற்றும் புரோக்கர்கள் என வந்து சென்ற 12 பேர் உள்ளேயே அமர வைத்தனர்.

    பின்னர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் சோதனை நடந்தது.

    புரோக்கர்களாக கருதப்படும் ஒரு சிலர் குறைந்த அளவு பணம் வைத்திருந்த நிலையில் அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு இரவு 9 மணிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஒரு சிலரை அதிக அளவு பணம் வைத்திருந்த குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், அதேபோல் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர்.
    • தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தூக்கி எறியப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத பணம் எவ்வளவு அலுவலக ஊழியர்களிடம் உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் மேலாளர்-விற்பனையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாய்கிறது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்வன் நகர் ஆகும்.

    இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார்.இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதை யடுத்து போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டதி பள்ளி சந்திப்பு அருகே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்தின் கார் சென்றது.பைப்புவிளை அருகே டாஸ்மாக் மேலா ளர் விஜய சண்முகம் காரை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது வடசேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும் டாஸ்மாக் மேலாளரின் கார் டிரைவருமான ரெஜின் அங்கு வந்து காரை எடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறைக்கு சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் ரெஜின் மீதும் பணம் கேட்டு வாங்குதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் மேலாளர் மற்றும் கடை விற்பனையாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ சார் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது துறைவாரி யாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. எனவே இருவரும் சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    • திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கெடிலம் பகுதியில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. இந்த மானிய பொருட்கள் நேற்று கெடிலம் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வந்தது. இதனை அடுத்து விவசாயிகள் தங்களது விவசாய நில சிட்டா அடங்கள் கொடுத்து அரசு மானியத்தை வாங்கி சென்றனர். இதனால் வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை டெப்போ மேனேஜர் செந்தில்நாதன் விவசாயிகளிடமிருந்து விவசாய சிட்டா நகலை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் ரூபாய் 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    இதுகுறித்து சில விவசாயிகள் கேட்டதற்கு செந்தில்நாதன் சரிவர பதில் கூறவில்லை. இதனால் விவசாயிகள் கள்ள க்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி பாலசுதர் இன்ஸ்பெ க்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆய்வின் முடிவில் வேளாண்மை துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 4,20,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வேளாண்மை துறை அதிகாரியான செந்தில்நாதனிடம் அரசு வழங்கிய மானியம் 40 ரூபாயை விட அதிகமாக விவசாயிகளிடம் பணம் வசூலித்து ரசீது இல்லாமல் மானிய பொருள்களை விற்பனை செய்ததற்கான காரணத்தை கேட்டனர். இதற்கு செந்தில்நாதன் செய்வதறியாது திகைத்து நின்றார். மேலும் போலீசார் இது குறித்து செந்தில்நாதன் மற்றும் அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமானுல்லா கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தகவல்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான், டெல்லி வக்ப் வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். வக்ப் வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்தது தொடர்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமானுல்லா கானுக்கு லஞ்ச ஒழிப்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

    இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

    இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

    காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

    மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

    மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

    • சேலத்தில் சுரேஷ் பணிபுரிந்தபோது நொரம்பு மண் அள்ளுவது தொடர்பான அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • இந்த வழக்கில் ஏலம் எடுத்தவருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சுரேஷ் ரூ.15 லட்சம் அபராதம் கட்டியுள்ளார்.

    தருமபுரி:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சேலத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    அங்கு 4 வருடங்கள் பணிபுரிந்துள்ளார். பின்னர் பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

    அப்போது தனிப்பட்ட முறையில் 6-க்கும் மேற்பட்ட குவாரிகளை தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வந்துள்ளார். இதில் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து மீண்டும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து கிருஷ்ணகிரியிலேயே பணியை தொடர்ந்து வந்துள்ளார்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சுரேஷ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சேலத்தில் சுரேஷ் பணிபுரிந்தபோது நொரம்பு மண் அள்ளுவது தொடர்பான அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் ஏலம் எடுத்தவருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சுரேஷ் ரூ.15 லட்சம் அபராதம் கட்டியுள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 நாட்களாக சேலத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முற்றுகையிட்டு ஆவணங்களை திரட்டினர்.

    இந்த நிலையில் இன்று தருமபுரி நகர் சூடாமணி தெருவில் உள்ள சுரேஷின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

    சுரேஷ் பெரும்பாலும் சொந்த ஊரில் இருப்பதில்லை. அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமே தருமபுரியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுசூழல் துறை அனுமதி பெறாமல் குவாரிகளை ஏலம் விட்டதாகவும் சுரேஷ் மீது புகார் எழுந்தது.

    இது தொடர்பாக முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த ஏலத்துக்கு தடையாணை பெற்றுள்ளார். சுரேஷ் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவருக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

    சர்ச்சைக்குரிய அதிகாரி வீட்டில் நடந்த அதிரடி சோதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    ×