search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை
    X

    குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர்.
    • தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தூக்கி எறியப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத பணம் எவ்வளவு அலுவலக ஊழியர்களிடம் உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×