search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி பறிமுதல்"

    • ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே முட்புதரில் 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருப்பதாக மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • குடோனில் சட்டவிரோதமாக 12.5 டன் ரேஷன் அரிசி குருணை, 1 டன் ரேஷன் அரிசி ஆகியவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 3 பேரை கைது செய்த போலீசார் மினி லாரி மற்றும் குருணை ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு மினி லாரியில் 3 பேர் மூட்டைகளை குடோனுக்கு இறக்கி கொண்டிருந்தனர்.

    உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக 12.5 டன் ரேஷன் அரிசி குருணை, 1 டன் ரேஷன் அரிசி ஆகியவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூப்பக்கோவில் அப்துல் கலாம் நகரை சேர்ந்த அருள் (வயது 19), அஜித்குமார் (24), கீழத்தெருவை சேர்ந்த ஆசைகுமார் (20) என்பதும், அந்த குடோனை லிங்கதுரை என்பவர் வாடகைக்கு எடுத்து ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து அவற்றை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அருள், அஜித்குமார், ஆசைகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து மினி லாரி மற்றும் குருணை ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.
    • 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் ரேஷன் அரிசி கடத்தி வருபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் நேற்று இரவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (24) என்பதும், வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி வந்தததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த காங்கேயத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் காங்கேயம் அருகில் ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமி நகர் 2 வது வீதியில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அதில் அவர் காங்கேயம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (47) என்பதும், அவர் பொது மக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. பின்னர் வெங்கடேசை கைது செய்து அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கைது
    • 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் இருந்தது

     கோவை,

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீசார் கோவை குனியமுத்தூர் - பாலக்காடு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அவ்வப்போது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையும் செய்துவந்தனர். அப்போது குனியமுத்தூர் - பாலக்காடு ரோட்டில் ஒரு மினி லாரி விபத்து ஏற்பட்ட நிற்பதாக இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மினி லாரியில் சுமார் 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் 2700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டதும் டிரைவர் தப்பிச்செல்ல முயற்சி செய்தார். இதனை பார்த்த அதிகாரிகள் டிரைவரை மடக்கிப்பிடித்தனர்.

    விசாரணையில் டிரைவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிஜோ ஜெபஸ்டின் என்பதும் முருகேச பாண்டியன் என்பவர் டிரைவர் வேலைக்கு தன்னை அழைத்து சென்று மினி லாரியில் அரிசியை ஏற்றி கேரளா சென்று நிறுத்தி வைக்கவும் கூறியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜிஜோ ஜெபஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் மினி வேன் மற்றும் அரிசி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

    • வில்லிவாக்கத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் ராஜாஜி நகர், காமராஜர் தெருவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ஆட்டேவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த எண்ணுாரை சேர்ந்த ரஞ்சித்குமாரை(37) கைது செய்தனர். அவர் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரியவந்து. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பெரியசேவலை மெயின் ரோட்டில் உள்ள ரகோத்தமன் மகன் முருகன் (வயது 50) என்பவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.

    ×