search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி பறிமுதல்"

    • காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 635 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 52) என்பதும், அவர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யவும், மாட்டு தீவனத்துக்கு கொடுக்கவும் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து 635 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.
    • அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் உடன் விரைந்து சென்று பார்த்த பொழுது சாலையில் 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடைப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.

    அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட பொழுது, அவர் தான் வெளியில் சென்று இருந்ததாகவும் யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து தனது வீட்டு வாசலுக்குள் போட்டுள்ளதாகவும் இந்த அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து மொத்தம் 40 கிலோ ரேசன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

    ரேசன் அரிசியை வீசி சென்றது யார்? அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
    • ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக ஆந்திரா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லோடு வேன் டிரைவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ் (வயது 32) என்பவரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

    லோடு வேனுடன் ரேசன் அரிசியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது
    • டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கொடைக்கானல் குடிமை பொருள் வட்டாட்சியர் சரவண வாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளங்கி கோம்பையை சேர்ந்த டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர்.
    • 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் காமினி, கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில். குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் இரவு காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது, பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை தொடர்ந்து 2 லாரிகளிலும் சோதனை செய்தபோது 40 கிலோ எடை கொண்ட 250 பிளாஸ்டிக் பைகளில் 9 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் சரயு அமைத்துள்ளார்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில், பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறையினர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர்.

    அதில், 25 கிலோ அளவிலான, 600 சாக்கு பைகளில், 15 டன் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தை சேர்ந்த கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கன்டெய்னர் லாரியும் தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
    • பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது முஸ்லீம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    அப்போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பிறகு விசாரணை செய்ததில் தப்பி ஓடிய நபர் பாலக்கோட்டை சேர்ந்த யாக்கோபு சாய்பு மகன் முஜமில் (28), அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாப் ஜான் மகன் இம்ரான், நூருல்லா மகன் நவாப் ஜான் மற்றும் பென்னாகரம் மகபூப் பாஷா ஆகியோர் மீது சிவில் சப்ளை சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் திருமலை நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த அரிசி, காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் வாங்கி,அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது-. அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் படி, தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட அரிசி, மண்ணெண்ணெய் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குதல் தொடர்பாக ஆங்காங்கே வாகன சோதனை மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் மோகனூர் அருகே வளையபட்டி பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

    • 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    மதுரை:

    பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்திலுள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் அரசின் பொது வினியோக திட்ட ரேஷன் பொருட்களான ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க வேண்டி மதுரை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையில் பணிபுரியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அதில் 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய இதரப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குடிமைப்பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தம் 695 கைப்பற்றப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது போல் வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ×