search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

    • வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் திருமலை நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த அரிசி, காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் வாங்கி,அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது-. அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×