search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீஞ்சூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    மீஞ்சூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே முட்புதரில் 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருப்பதாக மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×