என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி கடத்தல்"

    • அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்க மாக வேகமாக ஒரு வேன் சென்றது.அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது அதில் இருந்த டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி அந்த வேனை சோதனையிட்டார்அதில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனர். என்றாலும் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதனை கடத்தி வந்தவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவர் கைது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வடக்கு மண்டல குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட் டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட் டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 500 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    விசாரணை யில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிந்தது.

    அதைத்தொ டர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்ப டைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண் டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
    • இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த ரேஷன் அரிசியை வீடு, வீடாக சென்று வாங்கியவர்களிடமிருந்து 225 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன், ஜீப் ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோர் கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி என்ற இடத்தில் இருந்து கரிக்கல்நத்தம் - மாங்குட்டை ஏரிக்கு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர்.

    அபபோது அங்கு இருசக்கர வாகனத்தில், 5 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 225 கிலோ ரேஷன் அரிசி, மின்னணு எடை தராசுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன், தேவர்குந்தாணி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமன் என்பதும், அவர்கள் இருவரும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசை வாங்கி, மொத்தமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

    இந்த விசாரணையின் போது, அவர்கள் இருவரும் அரசி, இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். 

    • லாரி பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட் டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரி சியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இத னைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண் ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேசன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    நந்திவரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் நந்திவரம் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி டெம்போ லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அந்த மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அதில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 38) என்பதும், இவர் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி.சாலை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ லாரியும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
    • பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர்.
    • கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் இளங்கோ தலைமையில், பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, 5-வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, குடிநீர் தொட்டி அருகில் 50 கிலோ அளவில், 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்ட அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், 50 கிலோ அளவிலான, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அப்போது அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிபட்டி ராஜா (40), வெங்கடேசன் (27) என்பதும், கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.

    அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 2,050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணி கண்டன் (23) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×