search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice smuggling"

    • 22 மூட்டைகள் சிக்கியது
    • போலீசார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் மின்சார ரெயிலில் நேற்று இரவு அரக்கோணம் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 25 கிலோ எடை கொண்ட 22 அரிசி மூட்டைகள் இருக்கையின் அடியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெட்டியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    அவரை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • லாரி பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட் டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரி சியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இத னைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண் ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேசன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • டிரைவர் கைது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வடக்கு மண்டல குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட் டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட் டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 500 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    விசாரணை யில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிந்தது.

    அதைத்தொ டர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்ப டைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண் டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்க மாக வேகமாக ஒரு வேன் சென்றது.அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது அதில் இருந்த டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி அந்த வேனை சோதனையிட்டார்அதில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனர். என்றாலும் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதனை கடத்தி வந்தவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர்.
    • ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரைட் மேரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுதாரித்து கொண்ட போலீசார் தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை விரட்டி பிடித்தனர்.

    தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்ட போது தலா 50 கிலோ கொண்ட 61 கிலோ மூட்டை ரேசன் அரிசிகள் கடத்தி செல்வது தெரிய வந்தது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு கடத்துவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் அவனியாபுரத்தை சேர்ந்த பூவலிங்கம் (வயது 32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய முனிச்சாலையை சேர்ந்த பாண்டித்துரை (29) என்பவரை தேடி வருகின்றனர்.

    வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் ஆகியோர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பாலசந்தர், கண்ணன், தேவராஜ், ராம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஜோலார்பேட்டை, பச்சூர், காட்பாடி உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ரெயில்களில் ரே‌ஷன் அரிசி கடத்துவதை கண்டறிந்து 150 மூட்டைகளில் இருந்த 7 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    ×