search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவுக்கு 2 டன் ரேசன் அரிசி கடத்தல்
    X

    ஆந்திராவுக்கு 2 டன் ரேசன் அரிசி கடத்தல்

    • லாரி பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட் டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரி சியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இத னைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண் ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேசன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×