என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கர்நாடகாவிற்கு ரேசன் அரிசி கடத்தல்
- இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
- இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த ரேஷன் அரிசியை வீடு, வீடாக சென்று வாங்கியவர்களிடமிருந்து 225 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன், ஜீப் ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோர் கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி என்ற இடத்தில் இருந்து கரிக்கல்நத்தம் - மாங்குட்டை ஏரிக்கு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர்.
அபபோது அங்கு இருசக்கர வாகனத்தில், 5 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 225 கிலோ ரேஷன் அரிசி, மின்னணு எடை தராசுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன், தேவர்குந்தாணி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமன் என்பதும், அவர்கள் இருவரும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசை வாங்கி, மொத்தமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இந்த விசாரணையின் போது, அவர்கள் இருவரும் அரசி, இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்