search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பெரியசேவலை மெயின் ரோட்டில் உள்ள ரகோத்தமன் மகன் முருகன் (வயது 50) என்பவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.

    Next Story
    ×