search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்பீர் கபூர்"

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    அனிமல்

    அனிமல்

    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அனிமல்

    அனிமல்

    இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த டிரைலரில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரமாஸ்திரா.
    • இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பிரமாஸ்திரா

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம். அதற்கான கதையை இயக்குனர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • நடிகர் ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ரன்பீர் கபூர்

    இதையடுத்து நடிகர் ரன்பீர் கபூர் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி பல தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, "கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்று கூறினார்.

    • நடிகர் ரன்பீர் கபூர் தற்போது 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரன்பீர் கபூர்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. மேலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.


    ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய ரன்பீர்கபூர்

    அதாவது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க நடிகர் ரன்பீர் கபூர் சிரித்து கொண்டே போஸ் கொடுத்தார். ஆனால், அந்த ரசிகர் சரியான செல்ஃபியை எடுக்காததால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் செல்ஃபி எடுக்கமுடியவில்லை. இதனால் கடுப்பான ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் செல்போனை தூக்கி வீசுகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், இந்த வீடியோ விளம்பரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் #angryranbirkapoor என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இணைந்துள்ளார்.

    'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கான  'கபீர் சிங்' கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    அனிமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், 'அனிமல்'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கூர்மையான கோடரியுடன் ரன்பீர் கபூர் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    'அனிமல்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிக்கு காலையில் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


     


    ஆலியா பட் 

    சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

     

    குழந்தை குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சி பதிவு

    இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டுள்ளார்.

    • பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

     

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

     

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


    பிரம்மாஸ்திரா

    இப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்த நிலையில் 12-ம் தேதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இன்று (14-09-2022) வரையில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தாகவல் வெளியாகியுள்ளது.


    பிரம்மாஸ்திரா

    அதுமட்டுமல்லாமல், பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஆலியாபட் -  ரன்பீர் கபூர்

    இதையடுத்து ரன்பீர் கபூர், ஆலியாபட் உடன் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகாகாளி கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது இந்து அமைப்பினர் சிலர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டியுள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆலியாபட் - ரன்பீர் கபூர்

    கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது பட புரோமோஷன் விழாவின் போது மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் என்று கூறிய வீடியோ தற்போது வைரலானதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    பிரமாஸ்திரா

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது. எனது பயணம் இங்கு தான் தொடங்கியது. "விக்ரம்" திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    • ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.உள்ளார்.

    நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் கரும்புகை வான்வரை பரவியது. காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தன.


    இதில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி கூப்பர் மருத்துவமனையின் மருத்துவர் சதாபுலே கூறும்போது, மும்பை அந்தேரியின் மேற்கு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே 32 வயது ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார்.

    நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் நேற்றிரவு 10.35 மணியளவில் மும்பை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


    இந்த திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காமெடி மற்றும் காதல் கலந்த இந்த படத்தில் போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

     இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    ×