search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலியாபட்"

    • ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.
    • இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.


    இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் 'ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, "புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.


    ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்." என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

    நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
    • இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விரைவில் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.


    ஆலியாபட்

    தற்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


    ரன்வீர் சிங் கமெண்ட்

    அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரன்வீர் சிங், ''உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கமெண்ட்டுக்கு ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஆலியாபட் -  ரன்பீர் கபூர்

    இதையடுத்து ரன்பீர் கபூர், ஆலியாபட் உடன் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகாகாளி கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது இந்து அமைப்பினர் சிலர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டியுள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆலியாபட் - ரன்பீர் கபூர்

    கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது பட புரோமோஷன் விழாவின் போது மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் என்று கூறிய வீடியோ தற்போது வைரலானதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

    • இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியாபட்
    • இவர் விளம்பரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.


    ஆலியாபட்

    பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி  வருகிறார்கள்.

    இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    • இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
    • இவர் தற்போது நடித்துள்ள படம் "டார்லிங்ஸ்".

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அண்மையில் இவர் நடித்த 'கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மிகவும் திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆலியாபட் தற்போது நடித்துள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    டார்லிங்ஸ்

    இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் கணவரை ஆலியாபட் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆலியாபட்டிற்கு எதிராக 'பாய்காட் ஆலியாபட்', 'பாய்காட் டார்லிங்ஸ்' #boycottAliaBhatt #boycottDarlings போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


    டார்லிங்ஸ்

    மேலும், ரசிகர்கள் பலர் "டார்லிங்ஸ்" படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் ஆலியாபட் போன்ற கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.



    ×