search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகுல் ப்ரீத்தி சிங்"

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #NGK #Suriya #NGKTeaser
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், `என்ஜிகே' படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #NGK #Suriya #NGKTeaser #NGKFire

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் யுவன் ஷங்கர் ராஜா பிசியாக இருக்கிறார். சமீபத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


    இதற்கிடையே என்ஜிகே படத்திற்கு இசையமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இசை பணிகள்துவங்கிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செல்வராகவன் கூறியிருப்பதாவது,


    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, அழகான சித் ஸ்ரீராம், திறமை வாய்ந்த பாடலாசிரியல் உமாதேவி உள்ளிட்டோருடன் என்ஜிகே படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது. சிறப்பான கூட்டணி. என்று கூறியுள்ளார்.

    படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை வருகிற நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ஜிகே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா நவம்பரில் படக்குழுவில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்ஜிகே. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்த நிலையில், எஞ்சிய காட்சிகளை விரைவில் படமாக்கி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கடைசியாக ராஜமுந்திரியில் படப்பிடிப்பை முடித்த சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் இணைந்தார்.

    சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் டெல்லியில் நடந்து வந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து வருகிற நவம்பரில் சூர்யா என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் பிரபு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #NGK #Suriya

    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் `தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடக்கவிருந்த நிலையில், கடும் மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. #Dev #Karthi
    `கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். 

    மேலும் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அதற்காக படக்குழு குலு மணாலி சென்றிருந்தது.

    இந்த நிலையில், கனமழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும் போது, 



    23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும், அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பால் தயாரிப்பாளருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Dev #Karthi #RakulPreetSingh

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார். #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மூவிபஃப் இணைந்து நடத்தும் குறும்பட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.

    அதில் சூர்யா பேசும் போது,

    படத்தை ஆரம்பிக்கும் போது, எப்படி முடிக்க நினைத்தோமோ அப்படி முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். என்ஜிகே தீபாவளிக்கு வரமுடியவில்லை என்பதில் எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. உங்களது நிலைமையும் புரிகிறது. அனைத்து இடங்களிலும் என்னனென்ன விஷயங்கள் நடக்கிறது, அதற்காக நீங்கள் என்னென்ன போராடுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கு இணையான பிரச்சனைகளை நாங்களும் சந்திக்கிறோம், அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். 



    இது வழக்கமான ஒரு படமாக இருக்காது. வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் செல்வராகவனுடன் இணைந்தேன். படமும் சிறப்பாக உருவாகி வருகிறது. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது. தயாரிப்பு தரப்பும் அவர்களது கடமையை சரியாக செய்து வருகிறார்கள். படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக காத்திருப்போம் என்றார். #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    ராஜமுந்திரியில் என்ஜிகே படப்பிடிப்பில் இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். சூர்யா வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சூர்யாவை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர்.



    கேரவனில் இருந்து இறங்கிய அவரை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்கள். வழிநெடுகிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சூர்யாவால் செல்ல முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்புடன் அடுத்த நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சூர்யா படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம் வசூல் பார்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தில் எம்.எல்.ஏ.,வாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NGK #Suriya
    சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

    சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்ற கதையில் நடித்திருந்தார் சூர்யா. 



    இந்த நிலையில், நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படம் குறித்து வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #NGK #Suriya
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்றும், எனவே படம் தீபாவளிக்கு ரிலீசாகாது, கிறிஸ்துமசுக்கு தள்ளிப்போனதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. 

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள செல்வராகவன்,

    `நண்பர்களே, இது ஒரு எளிமையான மருத்துவ சிகிச்சை தான். நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என்ஜிகே படப்பிடிப்பு துவங்கும். உங்களது அன்பிற்கு நன்றி' என்று கூறியிருக்கிறார். 

    இதன்மூலம் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகி இருக்கிறது. விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. #NGK #Suriya

    பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NTRBiopic
    தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.

    அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்றுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். முழு நீள படத்துக்காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரகுல் பிரீத்தி சிங். இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.



    படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணா தயாரிக்கிறார். #NTRBiopic #RakulPreetSingh

    ×