search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி சாவு"

    • சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கண்டியாமேடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நாகாயாள் (வயது 75) இந்நிலையில் இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கோவிலுக்கு சென்ற மூதாட்டி மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    போடி மணியம்பட்டி நடுத்ெதருவை சேர்ந்த கருப்பசாமி மனைவி கனகாம்பரம் (வயது80). இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது மகன் பாண்டியன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சின்னமனூர் அடுத்த மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் அவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
    • சமயல் செய்த போது நடந்த சம்பவம்

    கரூர்

    கரூர் மாவட்டம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்படடி பகுதியை சேர்ந்த, மச்சநாயக்கர் மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவர், சம்பவத்தன்று வீட்டில் ஸ்டவ் அடுப்பில் வெந்நீர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென வெள்ளையம்மாள் உடையில் தீப்பிடித்தது. இதில், பலத்த தீக்காயமடைந்த வெள்ளையம்மாள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரஞ்சிப்பேட்டை இந்திரா வீதியைச் சேர்ந்தவர் மயிலியம்மாள்(87) இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நெரிஞ்சிப் பேட்டையில் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அம்மா–பேட்டை பகுதியில் இருந்து நெருஞ்சிப் பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மைலியம்மாள் மீது மோதியதில் பின்னந் தலையில் பலத்த அடிபட்டது உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தார் இதுகுறித்து மயிலியம்மாளின் மகன் ஆடலரசன் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்தார்
    • உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி பவுணம்பாள் (வயது 84). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வயல் காட்டில் இருந்த விஷ செடியை அரைத்து குடித்து மூதாட்டி மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுணம்பாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 5-வது தெருவை சேர்ந்தவர் யசோதை (வயது 65). இவர் இன்று குள்ளஞ்சாவடி செல்வதற்கு பண்ருட்டி பஸ் நிலையம் வந்தார். அங்கு மாம்பட்டு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார். அப்போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே யசோதை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    • நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.
    • ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளி போலீஸ் சரகம் கவுண்டப்பலூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த வர முருகம்மாள் (வயது 60).

    இவர் திருப்பத்தூர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×