search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து மூதாட்டி சாவு
    X

    விஷம் குடித்து மூதாட்டி சாவு

    • விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்தார்
    • உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி பவுணம்பாள் (வயது 84). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வயல் காட்டில் இருந்த விஷ செடியை அரைத்து குடித்து மூதாட்டி மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுணம்பாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×