search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் இன்று ஓடும் பஸ்சில் மயங்கி  விழுந்து மூதாட்டி சாவு
    X

    இறந்த மூதாட்டி யசோதை.

    பண்ருட்டியில் இன்று ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து மூதாட்டி சாவு

    • பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 5-வது தெருவை சேர்ந்தவர் யசோதை (வயது 65). இவர் இன்று குள்ளஞ்சாவடி செல்வதற்கு பண்ருட்டி பஸ் நிலையம் வந்தார். அங்கு மாம்பட்டு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட போது யசோதை திடீர் என மயங்கி விழுந்தார். அப்போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே யசோதை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×