search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OLD LADY DIED"

    • துணி துவைக்க சென்ற மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கணவாய்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி ராமக்காள் (வயது 75). இவர் கடந்த வாரம் சோளக்குளத்துப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை அருகில் உள்ள சங்கிலியான் கோவில் பகுதியில் துணி துவைப்பதற்காக சென்றார்.

    ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்நிலையில் இன்றுகாலை அங்குள்ள ஒரு குட்டையில் மூழ்கி ராமக்காள் இறந்து கிடந்தார். தண்ணீரில் இறங்கியபோது கால்வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் மூதாட்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மனைவி சபரியம்மாள்(72). இவர் தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக அம்பாத்துரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.
    • ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    ஜெயமங்கலம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் நடராஜ் மனைவி வேலம்மாள்(63).

    இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹீட்டரில் தண்ணீர் காயவைத்த போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு சென்ற மூதாட்டி மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    போடி மணியம்பட்டி நடுத்ெதருவை சேர்ந்த கருப்பசாமி மனைவி கனகாம்பரம் (வயது80). இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது மகன் பாண்டியன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சின்னமனூர் அடுத்த மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் அவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
    • சமயல் செய்த போது நடந்த சம்பவம்

    கரூர்

    கரூர் மாவட்டம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்படடி பகுதியை சேர்ந்த, மச்சநாயக்கர் மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவர், சம்பவத்தன்று வீட்டில் ஸ்டவ் அடுப்பில் வெந்நீர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென வெள்ளையம்மாள் உடையில் தீப்பிடித்தது. இதில், பலத்த தீக்காயமடைந்த வெள்ளையம்மாள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மண்எண்ணெய் கேன் மூடி எதிர்பாராதவிதமாக திறந்து தீப்பிடித்ததில் மூதாட்டி உடல் கருகியது.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பொம்மையகவுண்டன்பட்டி மருத்துவர் தெருவை சேர்ந்த மாலு மனைவி குருவம்மாள்(87).

    இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் கேன் மூடி எதிர்பாராதவிதமாக திறந்து தீப்பிடித்தது.

    உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தீக்காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • இவருக்கு திருமணம் ஆகவில்லை

    கரூர்

    கடவூர் அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் பழனியம்மாள் சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழியம்மாளின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பழனியம்மாளின் அக்காள் மகன் குமரேசன் கொடுத்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×