search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி நிதிஷ்குமார்"

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பை வீசிய இளைஞருக்கு அவரது கட்சியினர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். #Nitishkumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள பாபு சபாகர் மைதானத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்ர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரை நோக்கி செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக செருப்பு அவர்மீது படாமல் கூட்டத்தில் விழுந்தது.



    இந்த தாக்குதலை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் சந்தன் என்பதும், பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. #Nitishkumar
    பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Nitishkumar #Congress
    பாட்னா:    

    பீகாரில் விபச்சார கும்பல் தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததற்கு அவர்கள் தான் காரணம் என கருதி அங்கிருந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக  மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கவ்காப் குவாட்ரி கூறுகையில், பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்றதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தால் பீகார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது உறுதியாக தெரிகிறது. எனவே, மாநில அரசி இனியும் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Nitishkumar #Congress
    பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவை முடித்து கவர்னரை சென்று சந்தித்தனர். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
      
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவித்தார். 

    இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர், இருவரும் இரவு உணவை முடித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சென்று சந்தித்தனர்.

    தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித்ஷா பாட்னா வருவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
     
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    இன்று காலை 10 மணிக்கு விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நிதிஷ்குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு அருந்துகிறார்.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித் ஷா பாட்னா வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அளித்த விருந்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார். #Bihar #NDALeaders #CMNitishKumar
    பாட்னா:

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அரசின் சாதனைகளை மக்களிடமும், முக்கிய பிரபலங்களிடமும் பாஜகவினர் விளக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்,, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், ராதா மோகன் சிங் மற்றும் துணை முதல் மந்தி சுஷில் குமார் மோடி, மாநில பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
    அடுத்த ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என முவுவானது.#Bihar #NDALeaders #CMNitishKumar
    லாலுபிரசாதின் மகன் தேஜ் பிரதாப் திருமணத்துக்கு நேரில் சென்ற முதல் மந்திரி நிதிஷ்குமார் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Nitishkumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலுபிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற இவர் சிறையில் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் பீகாரின் முன்னாள் மந்திரி சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய் திருமணம் இன்று நடைபெற்றது. 

    இந்நிலையில், லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் திருமணத்துக்கு நேரில் சென்ற முதல் மந்திரி நிதிஷ்குமார் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த திருமணத்தில் பீகார் ஆளுனர் சத்யபால் மாலிக், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், முதல் மந்திரி  நிதிஷ்குமார், மூத்த தலைவர் சரத் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மேலும், உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்பட பலர் பங்கேற்றனர். #LaluPrasad #Tejpratap #Nitishkumar
    ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். #Nitishkumar #IAS
    பாட்னா: 

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இதேபோல், பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். #Nitishkumar #IAS
    ×