search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAS exam"

    தோல்வியை கண்டு பின் வாங்காமல், பெற்றோரின் ஆதரவு வார்த்தைகளுடன் மீண்டும் முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்தவர் சந்தோஷ்குமார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்து விட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் வேலைசெய்து வந்தார். இந்தநிலையில் இவரது ஆசிரியர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஸ்ரீதர், என்பவரின் அறிவுரையின் பேரில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத தொடங்கினார்.

    படிப்பதற்கு போதிய நேரமில்லா சூழலில், வருமானம் தந்து கொண்டிருந்த தனியார் நிறுவன வேலையையும் விட்டு படிக்க தொடங்கினார். முதல் முயற்சிகளில் தொடர்தோல்விகளே அவருக்கு கிடைத்தது. தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோல்வியை கண்டு பின் வாங்காமல், பெற்றோரின் ஆதரவு வார்த்தைகளுடன் மீண்டும் முயன்றேன். தேர்வு குறித்து தெளிவான புரிதல், குழுவாக படித்தல், தினசரி செய்திகள் மற்றும் அதன் பல்வேறு கோணங்கள் இவற்றுடன் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி ஆகியவற்றோடு மீண்டும் களமிறங்கினேன். வெற்றி பெற்றவர்களை விட தோல்வி கண்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

    அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கபடவேண்டும். அவர்கள் மனம் தளராமல் வெற்றி பெறுவோம் என்ற நல்ல சிந்தனையுடன் முயலவேண்டும். தேர்வில் எந்த மாதிரியான கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபடும் என சுயமாக புரிந்துவைத்துகொள்ளுதல் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். இணையம் வளர்ந்து வரும் நிலையில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது, ஆகவே இணையம் வாயிலாக கற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும்.

    ஐ. ஏ. எஸ், தேர்வுக்கான பாடதிட்டம் பெரியது, அதை புரிந்து படிக்கவேண்டும். பயிற்சி மையத்தில் பணியிலிருக்கும் அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றது மிகவும் உதவியாக இருந்தது. முயற்சி செய்தால் வெற்றி எல்லோர்க்கும் சாத்தியம் என்று பொத்தாம்பொதுவாக எண்ணிவிடாமல் புரிந்து படித்தல், குழுவாகப் படித்தல், தோல்விகள் குறித்து வருந்தாமல் ஏற்றுக்கொள்ளுதல், தொடர்முயற்சி, ஆகியவைகளும் அரசின் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திகொண்டதும் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார் சந்தோஷ்குமார்.

    ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித சார்பும் இன்றி, அனைத்து பணிகளுக்கும், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பணியாளர்களாக நியமனம் செய்கிறது.

    ஆனால் தற்பொழுது பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முறையில் ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ மதிப்பெண்களை, யு.பி.எஸ்.சி.யின் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து, இறுதி நியமனப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பணியாளர் நியமனம் தேர்வு மற்றும் தர அடிப்படையில் மட்டும் நடைபெறாமல் ஒரு சில பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் தலையீட்டுக்களுடன் நடைபெறுவதற்கு வழிவகுக்கும்.

    கிராமப்புற இளைஞர்கள் மற்றும் எளிமையான பின்புலத்தில் இருந்து தேர்ச்சி பெறுகின்ற இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த மாற்றம் சில உயர் நிலையிலிருப்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகையளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ எனும் இந்த பயிற்சியில் இந்தி மொழித்தேர்வும் நடைபெறுவதால் இந்தி மொழி பேசாத இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ என்பது முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியைத் தவிர்த்து மேலும் 3 இடங்களில் நடைபெறும். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலமாக அனைத்து இடங்களிலும் உள்ள தேச்சி பெற்றவர்களை சரிவர மதிப்பீடு செய்ய முடியாது.

    1978-ல் கோத்தாரி கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த இதுபோன்ற மாற்றத்தை அன்றைய ஜனதா கட்சி அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய அரசு நடப்பில் உள்ள யூ.பி.எஸ்.சி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையிலும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீட்டு முறையிலும், எவ்வித மாறுதல்களும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். #Nitishkumar #IAS
    பாட்னா: 

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இதேபோல், பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். #Nitishkumar #IAS
    ×