search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clear"

    ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். #Nitishkumar #IAS
    பாட்னா: 

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இதேபோல், பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். #Nitishkumar #IAS
    ×