search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலீடு"

    • ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள்.
    • நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் தருவதாகவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இனிவரும் காலங்களில் இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மையை அறியலாம்.

    வீடு, கடையின் உரிமையாளர்கள் வாடகைக்கு விடும்போது அந்த நபர்கள் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்தும், அவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, நிரந்தர முகவரி ஆகிய ஆவணங்களை பெற வேண்டும். நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாக பேசுவதாக கூறி வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஓ.டி.பி. நம்பரை பகிருமாறு கூறினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக இருங்கள். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கிராம கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.

    வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலைக்கு வரும் நபர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் அந்த நபரின் முழு விவர ஆதாரங்களை பெற வேண்டும். நபர் குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்ழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா? என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தேவகோட்டை

    நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன், கபில் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரம் கோடிகளை நியோமேக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா ஆகியவை ஏற்பாடு செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

    இதனால் அதிகளவில் முதலீட்டாளர்கள் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள் ளனர். உறவினர்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் ஆகியோர் அதிகளவில் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்களை குறிவைத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர்.

    எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு வட்டி கொடுப்போம் என்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் முதலீட்டா ளர்களிடம் கூறியுள்ளனர்.

    முதலீட்டாளர் கூட்டங்களுக்கு இயக்கு னர்கள், ஏஜெண்டு கள் விலை உயர்ந்த கார்களில் வருவதை பார்த்து ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளனர்.

    தேவகோட்டை பகுதி களில் நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டு களாக உள்ளனர். இவர்க ளின் சொகுசு வாழ்க்கையை பார்த்து பொது மக்கள் ஆசைப்பட்டு அதிக பணத்தை கட்டியுள்ளனர்.

    ஆனால் தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை நம்பி நியோமேக்ஸ் நிறுவ னத்தில் முதலீடு செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    • இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
    • 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.

    தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.

    இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.

    ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.

    இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.

    இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.

    இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.

    கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.

    ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.

    300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.

    இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.

    உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.

    இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.

    பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.

    வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.

    இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

    ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.

    தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.

    நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.

    ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

    ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.

    அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.

    அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.

    தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

    இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.

    எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.

    வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.

    ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை.
    • உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார்.

    உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர்ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தி.மு.,க அ.தி.மு.க மாறிமாறி ஆட்சி செய்துள்ளது.

    திராவிட மாடல் என்று தற்போது புதியதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட வார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

    நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே. பா.ம.க 2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க, தி.மு.க.விற்கு உள்ளடக்கியதா என்பதை விளக்க வேண்டும்.

    கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

    அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும், தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும், உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கடந்த இரண்டு மாதங்களில் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை. தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும்.

    நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.

    பா.மக ஆட்சியில் தற்போது இருந்தால் நிச்சயமாக

    ரூ. 1 லட்சம் கோடிக்கு நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்போம். வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க தான்.

    இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்

    தமிழக இளைஞர்களை மது, சூது போன்றவற்றால் சீரழிந்து வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    வாக்காளர்களே ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். அடுத்த 50 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப் பேரவை, இளைஞர் அணியினர், மாணவரணியினர், உழவர் பேரியக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
    • காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை அடுத்த கட்டையன் விளையில் இயங்கி வந்த சன்ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் (இந்தியா) லிமிடெட், வின்ஸ்டார் நிதி லிமிடெட் மற்றும் வின் சன் ஸ்டார் ரிலேட்டர்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவால் 2008-12-2019-ந்தேதி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 26-9-2022 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரையிலும் நாகர் கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவல கத்தில் புகார் மனு கொடுக் காதவர்கள் உடனடி யாக நாகர்கோவில் பொரு ளாதார குற்றப்பிரிவு-3 அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடி நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
    • இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியூ ரைஸ் அலயம் சுமால் பைனான்ஸ் பேங்கிங், நியூ ரைஸ் அலயம் குரூப் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களை பொன்னுசாமி மகன் ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேசுவரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர்உசேன் மற்றும் 40 பேர் கூட்டு சேர்ந்து மேற்கண்ட நிதிநிறுவனங்களை தொடங்கி நடத்தினர்.

    இந்த நிறுவனங்களில் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்தபகுதி மக்களிடம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பிதராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து காரைக்குடி டவுன் சிக்கரி குடியிருப்பை சேர்ந்த சகாதேவன் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதாரக்குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது. எனவே மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425ஏ, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×