என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்
- காரைக்குடி நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
- இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியூ ரைஸ் அலயம் சுமால் பைனான்ஸ் பேங்கிங், நியூ ரைஸ் அலயம் குரூப் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களை பொன்னுசாமி மகன் ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேசுவரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர்உசேன் மற்றும் 40 பேர் கூட்டு சேர்ந்து மேற்கண்ட நிதிநிறுவனங்களை தொடங்கி நடத்தினர்.
இந்த நிறுவனங்களில் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்தபகுதி மக்களிடம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பிதராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.
இதுகுறித்து காரைக்குடி டவுன் சிக்கரி குடியிருப்பை சேர்ந்த சகாதேவன் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதாரக்குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது. எனவே மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425ஏ, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்