search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்
    X

    நாகர்கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
    • காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை அடுத்த கட்டையன் விளையில் இயங்கி வந்த சன்ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் (இந்தியா) லிமிடெட், வின்ஸ்டார் நிதி லிமிடெட் மற்றும் வின் சன் ஸ்டார் ரிலேட்டர்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவால் 2008-12-2019-ந்தேதி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 26-9-2022 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரையிலும் நாகர் கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவல கத்தில் புகார் மனு கொடுக் காதவர்கள் உடனடி யாக நாகர்கோவில் பொரு ளாதார குற்றப்பிரிவு-3 அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×