search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்சியை எங்களிடம் கொடுங்கள்; வளர்ச்சி திட்டத்தை உருவாக்குவோம்- அன்புமணி ராமதாஸ் பேச்சு
    X

    அன்புமணி ராமதாசுக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பசுங்கன்று நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஆட்சியை எங்களிடம் கொடுங்கள்; வளர்ச்சி திட்டத்தை உருவாக்குவோம்- அன்புமணி ராமதாஸ் பேச்சு

    • கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை.
    • உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார்.

    உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர்ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தி.மு.,க அ.தி.மு.க மாறிமாறி ஆட்சி செய்துள்ளது.

    திராவிட மாடல் என்று தற்போது புதியதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட வார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

    நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே. பா.ம.க 2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க, தி.மு.க.விற்கு உள்ளடக்கியதா என்பதை விளக்க வேண்டும்.

    கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

    அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும், தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும், உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கடந்த இரண்டு மாதங்களில் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை. தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும்.

    நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.

    பா.மக ஆட்சியில் தற்போது இருந்தால் நிச்சயமாக

    ரூ. 1 லட்சம் கோடிக்கு நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்போம். வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க தான்.

    இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்

    தமிழக இளைஞர்களை மது, சூது போன்றவற்றால் சீரழிந்து வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    வாக்காளர்களே ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். அடுத்த 50 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப் பேரவை, இளைஞர் அணியினர், மாணவரணியினர், உழவர் பேரியக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×