search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடை"

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது .
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப்புதூா் மற்றும் கிளாங்குண்டல்.

    கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா் மற்றும் பெருமாள்வலசு.

    கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம் துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம் மற்றும் ராமபட்டணம்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர், ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம், அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    உடுமலை

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ஆர்.தேவானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேவனூர்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    ஆகவே நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அப்போது மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    • திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
    • இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திருவட்டார்:

    வீயன்னூர் துணை மின் நிலைய உயர் மின்ன ழுத்தப்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்றூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் பேச்சிப்பாறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணியூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ் சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தக்கலை உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டு விளை, பரசேரி, ஆளூர், பேயன்குழி, மொட்டவிளை, காரங்காடு, நெட்டான்கோடு, பூலன்கோடு, வீராணி, தோட்டி யோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங் கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமிவிளை, முளகுமூடு, சாமியார்மடம், கல்லுவிளை, மேக்கா மண்டபம், செம்பருத்திவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல் விளை ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்தநேரத்தில் மின்பாதை மற்றும் மின்கதட கங்களுக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுபோல் குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத் தெரு ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை (4-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் கோட்டத்திற்குட்பட்ட உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம்,

    ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயண த்தேவன்பட்டி, லோய ர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், ைஹவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:- அவினாசி துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நொய்யலில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற விருப்பதால் காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 4-ந்தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.
    • பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     உடுமலை:

    உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அழகர்கோவிலில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொய் கை கரைப்பட்டி, நாயக்கன் பட்டி. அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி தொப் பலாம் பட்டி, கொடிமங்க லம், கருவனூர், தேத்தாம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×