search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொடக்குப்பட்டியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    மொடக்குப்பட்டியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×