search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயம்"

    • கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான்.
    • தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர், 

    கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான். இந்நிலையில் கடந்த, 6-ந்தேதி காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற அவன், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காப்பகத்தின் இயக்குனர் தர்மராஜ், கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி,

    திருச்சி செந்தண்ணீர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நித்யா (வயது 38).

    இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு நித்ராதேவி என்கிற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஈரோட்டில் உள்ள சகோதரி வீட்டில் நித்யா விட்டுவிட்டு திருச்சிக்கு திரும்பியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்துஅவரது கணவர் தனபால் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 25 ) என்பவர் திருச்சி காஜாபேட்டையில் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது மாயமானார். இது குறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை

     வேலா யுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டைக்கடை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 67) .இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனபாலனின் மகள் சற்று மன வளர்ச்சி குன்றியவராக இருந்து வருகிறார். மனவளர்ச்சி குன்றிய மகளை தாயார் ரேவதி கவனித்து வந்தார். இந்நிலையில் ரேவதி தனது மனவளர்ச்சி குன்றிய மகளை தன்னால் இனி பார்த்துக் கொள்ள முடியா து என்று தொடர்ந்து கூறி வந்தார்.

    அதற்கு விரைவில் ஒரு முடிவு செய்வதாகவும், மாற்று ஏற்பாடு செய்வ தாகவும் அவரது கணவர் தனபாலன் தெரி வித்துள்ளார். இந்நிலையில் தனபாலன் வீட்டிலிருந்து வெளியில் சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து அவரது மனைவி ரேவதியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்தும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ரேவதி வீட்டிற்கும் வரவில்லை .அதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலன் இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேவதி வீட்டில் இருந்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வீட்டில் இருந்தபோது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூலித் தொழிலாளி மாயம்

       வேலாயுதம்பா ளையம், 

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து( வயது 35). இவர் கரூரை சேர்ந்த ஒரு தனியார் தார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மணிமுத்து, கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்ன ரெங்க ம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கோபித்துக் கொண்டு மணி முத்து விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மணி முத்துவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர் வீடுகளிலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மணி முத்துவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமுத்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வேறு காரணத்தால் அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கந்தர்வகோட்டையில் இருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மாயமானார்கள்
    • கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை சின்ன அரிசிக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா பஷீர் மகள் யாஸ்மீனா (வயது 19). அதே பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகள் சபீனா (18) இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரி விடுமுறை முடிந்து கடந்த 2-ந் தேதி காலை இவர்கள் இருவரும் கந்தர்வகோட்டையில் இருந்து திருச்சி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் மாணவிகள் இருவரும் கல்லூரிக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளை அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    • கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் மாரிசெல்வி (வயது 22). இவர் நெல்லை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் எப்பொதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருந்துகடை ஊழியர்

    விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் ராஜ் (26) மருந்தாளுனர் படிப்பு முடித்துவிட்டு சூலக்கரையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது கல்வி சான்றிதழ்களை புதுப்பிப்பதற்காக கோவை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் விசாரித்தபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றார் என விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஜவகர்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி (40). தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஜவகர் ராஜ் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    திருச்சியில் 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

    திருச்சி, 

    திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவரது மகன் அஸ்வின் ராஜ் (வயது 14) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் படிப்பில் சரியாக அஸ்வின் ராஜ் கவனம் செலுத்தாத காரணத்தால் அவரது சகோதரர் தனுஷ் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் ராஜ் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றார்.

    பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்கவில்லை இது குறித்து அவரது சகோதரர் தனுஷ் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
    • செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    கன்னியாகுமரி மாவட் டம் சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவ ருக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சீதா (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஓரு மகள் உள்ளனர்.

    முதுகலை பட்டப்படிப்பு படித்து விட்டு ஆசரியர் படிப்பும் படித்துள்ள சீதா, குலசேகரன் புதூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் தனது 2 குழந்தைகளையும் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.

    கணவருடன் வசித்த சீதா தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். கடந்த 29-ந் தேதி அவர் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மாலையில் சீதா வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கணவர் கிருஷ்ணன் தேடி னார். ஆனால் எந்த தகவ லும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசில், கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான சீதாவை தேடி வருகின்றனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்காக 2 தனிப்படை களும் அமைக்கப்பட்டன. அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்கு சீதா சென்றிருக்கலாமா? என விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. சீதா கடத்தப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜான் ரோஸ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ரஷ்மி, மேரி லதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரஷ்மியை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்து ள்ளனர். மேரிலதா அழிக்காலில் உள்ளார்.

    நேற்று முன்தினம் பிரேமா திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் ரஷ்மி வீடு சென்று சேரவில்லை. உடனடியாக அவர்கள் பிரேமாவை திருவனந்தபுரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து பதட்டம் அடைந்த ஜான் ரோஸ் குடும்பத்தினர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். ஜான் ரோசின் மகள் மேரிலதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    • பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி
    • காரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி (வயது 40). இவர் உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 குழந்தைகளின் தாய் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி பூமாதேவி. இவர்களுக்கு இன்பராஜ் (4), யோகேஸ் பாண்டி (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பூமாதேவி வீட்டு வேலையை சரிவர செய்யாமல் எப்போ தும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை காளீஸ்வரன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காளீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை.

    அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு சென்றவர் என தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து மனைவி-குழந்தை களை கண்டுபிடி த்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் காளீஸ்வ ரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்கள்

    விருதுநகர் சாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் பவித்ரா (23). முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பொதுத் தேர்வு பயிற்சிக்கு செல்லும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் பயிற்சிக்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை என பவித்ரா கூறியுள்ளார்.

    ஆனாலும் பெற்றோர் பயிற்சிக்கு செல்லும்படி தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள முப்பத்திபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பொன்க விதா (22). வீட்டிலிருந்த பொன்கவிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த பிரதீப் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா. கடன் பிரச்சினை காரணமாக மனைவியின் 6 பவுன் நகைகளை அடகு வைத்தார். தவணை கட்ட முடியாததால் ஆட்டோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×