search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்
    X

    சுசீந்திரம் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்

    • கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
    • செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    கன்னியாகுமரி மாவட் டம் சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவ ருக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சீதா (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஓரு மகள் உள்ளனர்.

    முதுகலை பட்டப்படிப்பு படித்து விட்டு ஆசரியர் படிப்பும் படித்துள்ள சீதா, குலசேகரன் புதூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் தனது 2 குழந்தைகளையும் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.

    கணவருடன் வசித்த சீதா தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். கடந்த 29-ந் தேதி அவர் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மாலையில் சீதா வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கணவர் கிருஷ்ணன் தேடி னார். ஆனால் எந்த தகவ லும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசில், கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான சீதாவை தேடி வருகின்றனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்காக 2 தனிப்படை களும் அமைக்கப்பட்டன. அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்கு சீதா சென்றிருக்கலாமா? என விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. சீதா கடத்தப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×