என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிச்சந்தை அருகே மூதாட்டி மாயம்
    X

    வெள்ளிச்சந்தை அருகே மூதாட்டி மாயம்

    • திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜான் ரோஸ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ரஷ்மி, மேரி லதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரஷ்மியை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்து ள்ளனர். மேரிலதா அழிக்காலில் உள்ளார்.

    நேற்று முன்தினம் பிரேமா திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் ரஷ்மி வீடு சென்று சேரவில்லை. உடனடியாக அவர்கள் பிரேமாவை திருவனந்தபுரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து பதட்டம் அடைந்த ஜான் ரோஸ் குடும்பத்தினர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். ஜான் ரோசின் மகள் மேரிலதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×