search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீராங்கனைகள்"

    • சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். மேலும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    "சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனாலும், இவர்கள் ஒருவார காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏன் தெரியுமா? நம் தேசத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த பெண்கள் மற்றும் நம் சகோதரிகளிடம் பெரிய அரிசயல்வாதி தவறாக நடந்து கொண்டுள்ளார்," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

     

    "இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டிற்கு நற்பெயர் பெற்றுக் கொடுத்த இந்த வீராங்கனைகள் நமது குழந்தைகள், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் பரவாயில்லை, அவருக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்துள்ளார்.

    உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இவர்களது போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வருகிறது. 

    • டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராஙகனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்பதாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

    இதற்கிடையே 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது டெல்லி காவல் துறை வழக்குபதிவு செய்துள்ளது. அவர் மீது டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜனவரி மாதமும் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராஙகனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

     

    இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீது இன்று (ஏப்ரல் 28) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரப்பில் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் ஆஜராகி மைனர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம்சாட்டி தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, "ஆவணங்களில் உள்ள தரவுகளை வைத்து பார்க்கும் போது, மைனர் வீராங்கனைக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    "இது வெற்றியின் முதல்படி, ஆனாலும் எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்," என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

    • எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது.
    • பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவர் பதவி விலக கோரி முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சரிதா, சாக்ஷி, மாலிக், சங்கீதா, போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போராட்டத்தை தொடங்கினார். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராட்டம் நடத்தினார்.

    இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தகித்யா, சாக்ஷி மாகி, வினேஷ் போகத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூரை நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    அதில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட வேண்டும், அதன் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த கடிதம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் செயற்குழு ஆலோசனை செய்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்க இந்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த குழுவில் மேரிகோம், டோலா பானர்ஜி, அலக் நந்தா அசோக், யோகேஷ் வர்தத், சஹ்தேவ் யாதவ் மற்றும் 2 வக்கீல்கள் இடம் பெற்று உள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டது. வீராங்கனைகள் கோரிக்கைகளை ஏற்பதாக அவர் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். வீரர், வீராங்கனைகள் மத்தியில் அனுராஜ் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல், நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு 4 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்கும். விசாரணை முடியும் வரை 4 வாரம் அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பரிஜ் பூஷன்சிங் பதவி விலக மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆவேன். நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். பிரிஜ் பூசன் சிங் 6 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
    • இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

    கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதற்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்துவிடும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் என அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இது முழுமையாக விசாரிக்கும்.

    விசாரணை முடியும் வரை அவர் (சிங்) ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேற்பார்வைக் குழு மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை நடத்தும் என மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார்.

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவத் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முன்னதாக, மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    • பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டகளத்துக்கு முன்னாள் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அங்கு பல வீரர்-வீராங்கனைகள் குவிந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடுவிதித்துள்ளது.

    இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் நேற்று இரவு மத்திய மந்திரி அனுராக்தாகூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை அனுராக்தாகூரின் இல்லத்தில் நடந்தது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தகியா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

    பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்தனர்.

    மல்யுத்த சம்மேளனத்திடம் விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு இருப்பதால் காத்திருக்குமாறு மத்திய மந்திரி அனுராக்தாகூர் தெரிவித்தார்.

    மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

    ஆனால் பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் மந்திரி அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று 3-வது நாளாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் கூறும்போது, 5 முதல் 6 வீராங்கனைகள், சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது போலீசில் புகார் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். வீராங்கனை வினேத்போகத் கூறும்போது, எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். பிரிஜ்பூஷனை சிறைக்கு அனுப்பும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷன், தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என்றும் இது மல்யுத்த வீராங்கனைகளையும், விளையாட்டையும் கேவலப்படுத்த நடக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேட்டி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாஜக தலைவர் பபிதா போகத் உறுதி அளித்தார்.
    • மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பிருந்தா காரத், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது, இந்த போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுகூறி அவரை அங்கிருந்து செல்லும்படி கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.

    "தயவுசெய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம்" என பஜ்ரங் புனியா கேட்டுக்கொண்டார்.

    இதுபற்றி பேசிய பிருந்தா காரத், "மல்யுத்த வீரர்கள் இங்கு தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். விசாரணை முடிவடையும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.

    • மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு உள்ளதாக பபிதா போகத் கூறினார்.
    • மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பபிதா போகத் பேசும்போது, 'நான் முதலில் மல்யுத்த வீராங்கனை. மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு உள்ளது. இன்றே நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வேன். மேலும் நான் ஒரு மல்யுத்த வீராங்கனை மட்டுமல்லாமல் அரசாங்கத்திலும் இருக்கிறேன், எனவே மத்தியஸ்தம் செய்வது எனது பொறுப்பு. நான் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலும் இதுபோன்று பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நெருப்பில்லாமல் புகையாது. எனவே, வீராங்கனைகளின் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றார்.

    மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
    • லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இதுகுறித்து, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் கூறும்போது, "பிரிஜ்பூஷனின் பாலியல் தொல்லைக்கு குறைந்தது 10 முதல் 12 வீராங்கனைகள் உள்ளாகி இருக்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் விவரத்தை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது தெரிப்பேன்" என்றார்.

    ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இது தொடர்பாக விளையாட்டு அமைச்கம் தரப்பில் கூறும்போது, "இவ்விவகாரம் விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தையும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க தவறினால் தேசிய விளையாட்டு மேம்பாட்டு குறியீடு 2011 விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகள் அளித்த புகார்களின் நகலையும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் வருகிற 21ம் தேதிக்குள் கேட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசை மகளிர் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ்பூஷன் ஷரன்சிங் பாரதீய ஜனதா எம்.பி. ஆவார்.

    ×