என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அவங்க ஆதரவு உங்களுக்குத்தான் - மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்
- சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். மேலும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
"சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனாலும், இவர்கள் ஒருவார காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏன் தெரியுமா? நம் தேசத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த பெண்கள் மற்றும் நம் சகோதரிகளிடம் பெரிய அரிசயல்வாதி தவறாக நடந்து கொண்டுள்ளார்," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
"இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டிற்கு நற்பெயர் பெற்றுக் கொடுத்த இந்த வீராங்கனைகள் நமது குழந்தைகள், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் பரவாயில்லை, அவருக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இவர்களது போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்