search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான ஊழல்"

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
    • பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

    அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.
    • டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிற டெல்லியில் மதுபான கொள்கையில் மாபெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்கி சலுகைகளை தாராளமாக அளித்து, லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஊழலில் மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதுடன், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டது.

    இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா பெயரும் அடிபடுகிறது. குறிப்பாக சரத் ரெட்டி, கே கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உள்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் என்பவர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் கவிதாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள விடுதிகள், வாகனங்கள். வங்கி டெபாசிட்டுகள் என ரூ.76 கோடியே 54 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டது.

    இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

    * அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

    * முடக்கப்பட்ட சொத்துகள், ஆத் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் விஜய் நாயர், ஐதராபாத் மது தொழில் அதிபரும், ராபின் மதுபான நிறுனத்தின் பங்குதாரருமான அருண் பிள்ளைக்கு சொந்தமானவை ஆகும்.

    இந்த அருண்பிள்ளை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, மதுபான தொழில் அதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி கீதிகா மஹந்த்ரு மற்றும் அவர்களது நிறுவனமான இண்டோஸ்பிரிட் குழுமம் ஆகியவற்றினை குறிக்கிற சவுத் குரூப்பின் பிரதிநிதி ஆவார்.

    * டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர் அப்ரூவர் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. புட்டி ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குனர் அமித் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

    ×