search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டோஷூட்"

    • ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
    • சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.

    சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.

    ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.

    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

     

    இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன்.
    • இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம்.

    திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களின் பிறந்த நாள் முன்னிட்டு ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்.

    நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

    கடந்த முறை நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த அவரது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

    இது ராகவா லாரன்ஸ்-க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வணக்கம் நண்பர்களே ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது.

    அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன்.

    நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. நாளை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது விபரீதம்.
    • சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர்.

    இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.
    • இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன.

    சமீப காலமாக திருமண போட்டோஷூட்டுகளுக்காக மணமக்கள் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதோடு சில நேரங்களில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஒரு கதையை சொல்வதாக இருக்கிறது. இவர்கள் இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன. முதலில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் மணமகள் நடந்து வரும்போது ஒரு பாம்பை பார்க்கிறார்.

    உடனே அவர் பாம்பு பிடிப்பவரை உதவிக்கு அழைக்கிறார். அவர் அங்கு வந்ததும் பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார். அதன் பிறகு பாம்பை கையில் பிடித்துக்கொண்டு செல்லும்போது தன்னை தொடர்பு கொள்ளுமாறு செய்கை செய்கிறார். கடைசியில் 2 பாம்புகள் ஒன்றாக காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் சமூகவலைதள பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருசிலர் மணமக்களை வாழ்த்தியும், சிலர் விமர்சித்தும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×