search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதிமீறல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனா்.

    அதன்படி, காங்கயம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய வாகனச் சோதனையில் குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 625 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வளாா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

    • தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
    • சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரில் விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய தினமும் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 47 ரோந்து படையினர் போதை ஆசாமிகளை பிடிப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் போலீசார் மது குடித்திருக்கிறார்களா? என்பது பற்றி பரிசோதனை செய்கிறார்கள். இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அபராத தொகை உயர்த்தி வசூலிக்கப்படுவதால் போதையில் வீட்டுக்கு செல்பவர்கள் தவியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.

    வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போதையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் வார இறுதி நாட்களில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பெரும்பாலானோர் மது விருந்தில் ஈடுபடுகிறார்கள்.

    இவர்கள் விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது போலீசார் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மதுபோதையில் கும்பலாக சென்றும் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

    இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் 250 பேர் வரை போலீசாரிடம் சிக்குகிறார்கள். இப்படி மாட்டிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதுபோன்ற நேரங்களில் குடிமகன்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கி விடுகிறது என்றே கூறலாம். போலீசாரிடம் சிக்கியதும் சிலர், `என்ன... சார் தண்ணி அடிக்க மொத்த செலவே 500 ரூபாய்தான் ஆனது. நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறீர்களே' என்று வாக்குவாதம் செய்பவர்களும் உண்டு.

    இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அபராதம் விதித்த பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

    ரூ.10 ஆயிரம் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவரது அசையும் சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட வாகனம் உள்ளிட்ட ஏதாவது அசையும் சொத்தை ஏலத்தில் விட்டு ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற போலீசாரின் அதிரடியால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே குடிமகன்கள் தினமும் திண்டாடும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகுல், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவம்சி, கொருக்குபேட்டை அஜய், லோகேஷ் ஆகிய 4 வாலிபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
    • வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது.

    சென்னை:

    கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர்.

    இதுபோன்ற பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக முறையாக வாகன பதிவெண்களை பராமரிக்காத நபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து வந்தனர்.

    இந்தநிலையில் பதிவெண்களை முறைகேடாக அமைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் இன்று அதிரடியாக தொடங்கினர்.

    சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது. முதல்முறை சிக்கினால் ரூ.500 அபராதமும் 2-வது முறை பிடிபட்டால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு தலைமையிலான போலீசார் பதிவெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீஸ்களையும் வண்டியில் ஒட்டினர்.

    சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது.

    • பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.

    மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர். எனவே பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்கள், அதிவேகமாக வாகனத்தை சென்றவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.

    சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.
    • பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறக்கையில் கூறியிருப்பதாவது:-

    * அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப்பட்ட TROZ ஒரு வெற்றிகரமான திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 7,000 சலான்களை தானாக உருவாக்குகிறது.

    மேலும் ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் TROZ புதிதாக நிறுவ ரூ.10.5 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    * போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 கேமராக்கள் நிறுவப்பட்டு ஐ.டி.ஆர்.எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியில்லாத வழியில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களையும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது.

    * வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல்களைப் பெற 12 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டது இந்த அழைப்பு மையங்கள் மூலம் மொத்தம் ரூ.28,97,46,750/-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.

    பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது

    பொதுமக்களுக்கு அதிக காவலர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.

    * பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    * சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 47 ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், 103 அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வரும் இடங்களுக்கு விரைந்து சென்றும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    * அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு விபத்துக்கள் நடைபெறுவதற்கான நேரில் சென்று பார்வையிட்டு, காரணங்களை அறிந்து நெடுஞ்சாலை துறையினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
    • சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

    சென்னை:

    உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2023ஐ மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    • கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
    • ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இது போன்று பல்வேறு விதிமீறல்களுக்கும் நூற்றுக்கணக்கில் இருந்த அபராத தொகை ஆயிரங்களை தாண்டி உள்ளது. சென்னையிலும் புதிய அபராத வசூலில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய அபராத தொகை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    ஆனால் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளன. 97 ஆயிரம் வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

    போலீசார் விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக அபராத தொகையை வசூலிப்பதால் போக்குவரத்து விதிமீறல்கள் வெகுவாக குறைந்துள்ளன.

    அந்த வகையில் 60 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பழைய அபராத முறை அமலில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எவ்வளவு? புதிய அபராத முறை அமலான பின்னர் பதிவாகி இருக்கும் வழக்குகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்டபோது ஒரு மாதத்தில் 94723 ஹெல்மெட் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. புதிய முறை அமலான பின்னர் இந்த வழக்கின் எண்ணிக்கை 41,790 ஆக குறைந்துள்ளது.

    அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பழைய அபராத தொகையின்போது மாதத்துக்கு சராசரியாக 2461 என்கிற அளவில் இருந்துள்ளது. இது தற்போது 713 ஆக குறைந்துள்ளது.

    சிக்னலை மீறி செல்பவர்கள் மீது போடப்பட்ட வழக்கு முன்னர் 7580 ஆகவும், தற்போது 2356 ஆகவும் உள்ளது. புதிய அபராத தொகை அமலான பின்னர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த விதிமீறல் வழக்கின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.

    இதற்கு முன்னர் மாதத்துக்கு 11,788 வழக்குகள் போடப்பட்ட நிலையில் தற்போது சுமார் 4 ஆயிரம் வழக்குகளே பதிவாகி வருகின்றன.

    ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.

    இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய அபராத முறை அமலுக்கு வந்த பிறகு போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகன விபத்தை குறைக்க போக்குவரத்து துறையுடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை தடுக்க அபராத தொகை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 21-ந்தேதி முதல் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சென்னை பெருநகரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அபராதமாக ரூ.4 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை நகர் முழுவதும் ஒரே நாள் இரவில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 15 பேர் மது அருந்தி காரை ஓட்டி வந்து சிக்கிக்கொண்டனர். போக்குவரத்து விதிகளை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தவிர 683 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சந்தித்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டன. 13 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது.

    சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    • தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,500, வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • எண்ணூர் விரைவு சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று டிரைவர் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் விரைவு சாலையில் மணலி சி.பி.சி.எல். சந்திப்பு வளைவு பகுதி அருகில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது லாரி டிரைவர் ஒருவரை அழைத்தார். அவர் காக்கி சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். எதற்காக சீருடை அணியவில்லை என்று கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

    அதற்கு லாரி டிரைவர் என்னால் 500 ரூபாய் அபராதம் கட்ட இயலாது. இரவு முழுக்க கண் விழித்து லாரி ஓட்டினால் தான் என்னால் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதையும் அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    அதற்கு அவர் விடாபிடியாக அபராதம் விதித்து நீ கட்டாவிட்டால் உன் லாரி உரிமையாரை கட்ட சொல் என்றார். அதற்கு லாரி டிரைவர் விழி பிதுங்கியபடி அவர் கட்டமாட்டார். எனது ஒருநாள் உழைப்பு வீணாகி விட்டதே என்று கண்ணீர் விட்டு புலம்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
    • பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார். அவர் பாடிய பாடல் வருமாறு:-

    பைக்கில ஏறி நீ பண்ணுற ஜாலி

    நீ தவறி விழுந்துட்டா ஆளே காலி

    பத்திரமா போவனும்டா நீயும் வீட்டுக்கு

    பாதை மாறி நீயும் போயிடாத சுடுகாட்டுக்கு

    ரோட்டுலத்தான் சின்ன பசங்க குறுக்க போகும்டா

    பைக்க ஓட்டுற நீ தான் நாலு பக்கமும் பாத்து போகனும்டா

    எட்டு வயசு பையன்கூட பைக்கை ஓட்டுறான்

    அவனை பெத்தவனும் ஓட்டுறத பார்த்து ரசிக்கிறான்

    பைக்கை ஓட்டத்தான் பையன் அடம்புடிக்கிறான்

    பாதி வயசுலையே சுடுகாட்டுல இடம்புடிக்கிறான்

    ஓரம் ஒதுங்கி வழிய விடனும் 108க்கு

    தலையில ஹெல்மெட்டை நீ போடனும் உன் பாதுகாப்புக்கு

    போக்குவரத்து விதிகளைதான் மதிச்சு போகனும்

    ரோட்டுல ட்ராவல் செய்யும் போலீசுக்கும் உதவி செய்யணும்

    போன உசுருதான் மீண்டும் திரும்ப வராது

    ஒருத்தன அநியாயமா கொன்ன பாவம் உன்ன விடாது

    பச்சை, மஞ்ச, சிவப்பு விளக்கு மேல எரியுது

    நீ நின்னு போக வெள்ளகோடு கீழே தெரியுது

    சாலை விதிய மீறி நாம போகக்கூடாது

    தண்ணிய அடிச்சுட்டுத் தான் வண்டிய நீ ஓட்டக்கூடாது

    செஞ்சத் தப்புத்தான் நான் குத்திக்காட்டல

    ரோட்டுல பாத்தததான் பாடுறன்ப்பா இந்த பாட்டுல

    சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

    இந்த பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    ×