search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறிதாக 625 பேர் மீது வழக்கு பதிவு - ரூ.1.48 லட்சம் அபராதம் வசூல்
    X

    கோப்புபடம்.

    காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறிதாக 625 பேர் மீது வழக்கு பதிவு - ரூ.1.48 லட்சம் அபராதம் வசூல்

    • போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனா்.

    அதன்படி, காங்கயம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய வாகனச் சோதனையில் குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 625 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வளாா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

    Next Story
    ×