search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year celebrations"

    • அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
    • சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

    சென்னை:

    உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2023ஐ மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    • புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேனி:

    புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாளை அதிகாலை ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 82 இடங்களில் வாகன சோதனைகள், 77 இடங்களில் அதிரடிப்படை ேபாலீசார் ஆய்வு, 28 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரு சக்கர வாகங்களில் ரோந்து நடைபெற உள்ளன.

    மேலும் இரவு ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடகூடாது. மதுஅருந்தியும் அதிகவேகமாகவும் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
    • இதனால் புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.

    புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளிவிளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் வல்லவன் அறிவித்துள்ளார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே செங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற காந்திநகரை சேர்ந்த மாணவர்களை வாலிபர்கள் சிலர் மிரட்டி அனுப்பினர்.

    இதுபற்றி அறிந்த காந்திநகர் பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் இன்று காலை மிரட்டல், ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் உற்சாக மிகுதியால் யாரோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். #NewYearcelebrations #DelhiBoydies
    புதுடெல்லி:

    நாட்டின் வடமாநிலங்களில் தேர்தல் வெற்றி, திருமண விழா, பிறந்தநாள் விழா ஆகிய கொண்டாட்டங்களின்போது வசதிபடைத்த சிலர் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு வேடிக்கை காட்டும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    இதைப்போன்ற சம்பவங்களில் சில அசம்பாவிதங்களில் முடிந்துள்ளன. துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களும் சில இடங்களில் உயிரிழந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்புரா பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது, எங்கிருந்தோ பாய்ந்துவந்த துப்பாக்கி தோட்டாக்கள் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுவனின் உடலில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான்.



    இதேபோல், வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீட்டின் மாடியில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த 12 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக அந்தந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #NewYearcelebrations #DelhiBoydies 
    மும்பை நகரில் புத்தாண்டு இரவின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் ரோந்துப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    மும்பை:

    நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும்.

    இந்நிலையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    இதுதொடர்பாக, மும்பை துணை கமிஷனர் மஞ்சுநாத் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    பெண்களை ஈவ் டீசிங் செய்வது மற்றும் பாலியல் பலாத்காரங்கள் ஆகியவை நடக்காமல் கண்காணிப்பதற்காக மும்பை நகருக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சிறப்பு போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    ×