search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெலுக்வாயோ"

    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறிக்கு எதிரான வகையில் ஸ்லெட்ஜிங் செய்த சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் 2-வது போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் சொற்ப ரன்களில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்யும்போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

    உருது மொழியில் பேசிய சர்பிராஸ் அகமதின் வாய்ஸ், ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சர்பிராஸ் அகமது 3-வது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார்.

    இருந்தாலும் ஐசிசி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சர்பிராஸ் அகமது விளையாடமாட்டார்.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. #SAvPAK
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.



    தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர். 



    இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

    ×