search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கற்பழிப்பு"

    • பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன் (வயது27), அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (19) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி தருவைக்குளம் சென்றனர். அங்கு முருகன் அந்தப்பெண்ணை கற்பழித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்ட கோகுல்ராம் அவரை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை மிரட்டி முருகன் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரிடமிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற முருகன் தவறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோகுல்ராமும் கைது செய்யப்பட்டார்.

    கைதான முருகன் என்ற கட்டை முருகன் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 16 வழக்குகளும், சிப்காட் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என 18 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    • கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • தனிப்படை போலீசார் ரேவதி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே வஞ்சிபாளையம் கரியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி ரேவதி (வயது 35). இவர்களது மகன் ஹரிஷ் (8). கடந்த சில ஆண்டுகளாக ரேவதியின் கணவர் ரத்தினசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதனால் ரேவதி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ரேவதி வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் ரேவதி வேலைக்கு சென்று விட்டு நடந்து வரும் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி.கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள முட்புதர் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் மற்றும் போலீசார் சென்று ரேவதியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    ரேவதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ரேவதி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது தனிப்படை போலீசார் ரேவதி பணியாற்றிய பனியன் கம்பெனி, அவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரம் , அவர் சென்ற பாதை குறித்து ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் ரேவதியை பின்தொடர்ந்து வடமாநில வாலிபர் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் குறித்து விசாரிக்கும் போது அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்திற்கு போலீசார் சென்று விசாரித்த போது அவர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் வீட்டில் ரேவதியின் வளையல்கள் மற்றும் சில பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ரேவதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரேவதி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    ரேவதி வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பகுதி காட்டுப்பகுதி. அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை வடமாநில வாலிபர் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரேவதி தனியாக செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்ற வாலிபர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேவதியை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்த கல்லால் ரேவதியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் ரேவதி மயங்கினார். அந்த நேரத்தில் வடமாநில வாலிபர் கற்பழித்துள்ளார். சிறிது நேரத்தில் ரேவதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொல்லை அதிகரிக்கவே நீலராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் பெண் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் பாகுராஜா என்ற நீலராஜா (வயது 27). இவருக்கும் திருமலைக்கேணியில் பூக்கடை வைத்துள்ள திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    தனக்கு மில்லில் வேலை வாங்கித்தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அவரும் தான் வேலை பார்க்கும் மில்லிலேயே சேர்த்து விடுவதாகக்கூறி அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். ஆனால் மில்லுக்கு அழைத்துச் செல்லாமல் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

    மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே அடிக்கடி அந்த பெண்ணை தனியாக அழைத்து பலாத்காரம் செய்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே நீலராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனிடையே நீலராஜா தான் எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி மீண்டும் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். இதுகுறித்து வேடசந்தூர் கோர்ட்டில் அந்த பெண் மனுதாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீலராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வடமதுரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து நீலராஜாவை சிறயைில் அடைத்தார்.

    • கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
    • அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருடைய கணவர் ஐதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்தபோது உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவிக்கு அதே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. பெண்ணுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கம்மம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த சாமி என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து அவரது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டார். மேலும் பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.

    அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    மறுநாள் தான் செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு விடுவதாக மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கம்மத்தில் இருந்து பெண் ஐதராபாத் வந்து இருந்தார். அப்போது பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட சாமி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ள வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் கணவர் இறந்ததால் அவருக்கு வந்த ரூ.50 லட்சத்தை தர வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டினார்.

    சாமி தன்னைத்தொடர்ந்து மிரட்டி வந்ததால் விரத்தி அடைந்த பெண் இதுகுறித்து ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மனதை திடமாக்கிக்கொண்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு கடந்த 17-ந்தேதி பெண் வந்துள்ளார்.
    • பெண்ணை அருகில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார், அவர் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை பறித்து விட்டு தப்பிச் சென்றான்.

    திருச்சி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய பெண்ணுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை பெரம்பலூரில் உள்ள போதை மீட்பு மறு வாழ்வு மையத்தில் அவரது தாய் கடந்த 14-ந்தேதி சேர்த்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த மையத்திலிருந்து அவர் தப்பித்து திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்ற வாலிபரிடம் செல்போனைப் பெற்று தனது தாய்க்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது ரஞ்சித் குமார் அந்த வாலிபரின் குடும்ப சூழ்நிலைகளை தெரிந்து கொண்டார். தனக்கு தந்தை இல்லை என்றும், தான் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் ரஞ்சித்திடம் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஏற்கனவே 50 வயது பெண்களுடன் சல்லாபம் அனுபவித்து வந்த ரஞ்சித் குமாருக்கு குடிபோதை மகனின் தாயையும் வீழ்த்த முடிவு செய்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் அந்த அப்பாவி பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட ரஞ்சித் குமார் உனது மகன் இப்போது என் கஸ்டடியில் இருக்கின்றான். நீ முழு நிர்வாணமாக வீடியோ காலில் என்னிடம் பேச வேண்டும். இல்லையென்றால் உன் மகனை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன். நான் போலீஸ்காரன், சொன்னதை செய் எனக்கூறி மிரட்டியுள்ளார்.

    இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பயந்து கண்ணீருடன் தனது மேலாடையை களைந்து விட்டு பேசியுள்ளார். இதனை ரஞ்சித்குமார் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் மகனிடம் உனது காதலியின் செல்போன் நம்பரை கொடு என கேட்டுள்ளார்.

    ஆபத்தை உணராத வெகுளித்தனமான அந்த குடிமகன் அதையும் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆபாச படத்தை அந்த பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி கேவலமான குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரை எதற்காக காதலிக்கிறாய். இதற்கு என்னை நீ காதலிக்கலாம் என கூறியுள்ளார்.

    பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ராஜபாளையத்தில் இருந்த அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ரஞ்சித்குமார், உடனே திருச்சிக்கு புறப்பட்டு வா. இல்லையெனில் உன் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி இணைப்பை துண்டித்தார்.

    இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அந்தப் பெண் மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மனதை திடமாக்கிக்கொண்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு கடந்த 17-ந்தேதி வந்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை அருகில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார், அவர் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை பறித்து விட்டு தப்பிச் சென்றான்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டாலும், தன்னை போல் வேறு யாரும் இந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என்று கருதி திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பூரில் பதுங்கி இருந்த ரஞ்சித்தை கைது செய்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயில் அடைத்தனர்.

    கைதான வாலிபர் ரஞ்சித்துக்கு 50 வயதுடைய பெண்கள் பலருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேற்கொண்ட வயது பெண் ஒருவரிடம் அவர் தொடர்பில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×